ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் |
நாளை முதல் குடிக்கமாட்டேன், சாலையோரம் ஆகிய படங்களில் நாயகனாக நடித்தவர் ராஜ் வர்மா. இதில் முதல் படம் மதுவினால் ஏற்படும் தீமைகளையும், இரண்டாவது படம் குப்பை கழிவுகளினால் ஏற்படும் தீமைகள் பற்றிய கதையிலும் உருவாகின. இப்படங்கள் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை என்றபோதும், நல்ல படங்களில் நடித்த சந்தோசம் எனக்கு கிடைத்திருக்கிறது என்கிறார் ராஜ்வர்மா.
மேலும் அவர் கூறுகையில், நான் நடித்த படங்கள் பற்றியும் எனது நடிப்பு பற்றியும் விமர்சனங்கள் கடுமையாக இருந்தன. என்றாலும் நான் கவலைப்படவில்லை. அடுத்தடுத்து நல்ல கதைகளாக தேடிப்பிடித்து நடிக்க வேண்டும் என்பதில் மட்டுமே எனது கவனம் உள்ளது. இன்றைய நிலையில் ஒரு புதுமுக ஹீரோ நான் நடித்த இரண்டு படங்களும் தியேட்டருக்கு வந்ததே பெரிய விசயம். அந்த அளவுக்கு படங்களை எடுத்து வெளியிடுவது பெரிய சவாலாக உள்ளது.
அதோடு, அடுத்து நான் எந்த படத்திலும் கமிட்டாகவில்லை. நல்ல கதைகளாக எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறேன். குறிப்பாக, இந்தமாதிரி கதைகளில்தான் நடிப்பேன் என்றில்லாமல் எந்தமாதிரியான கதைகள், கதாபாத்திரங்கள் அமைந் தாலும் நடிப்பேன் என்று கூறும் ராஜ்வர்மா, என்னைப்பொறுத்தவரை பணம் முக்கியமல்ல. அதை தேடியும் போகக்கூடாது என்று நினைப்பவன். அதேசமயம் நல்ல கதைதான் வேண்டும். நல்ல கதைகளில் நடித்து நல்ல நடிகன் என்று பெயர் எடுத்தால் பணம் தானாக தேடி வரும் என்கிறார்