ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
சி.ஜே. பாஸ்கர் இயக்கத்தில் ஒளிபரப்பாகி வரும் ஹாரர் தொடர் ஆதிரா. ஸ்ரீவாணி, அஞ்சு அரவிந்த், ஜெய் தனுஷ் உள்பட பலர் முக்கிய வேடங்களில் நடிக்கும் இந்த சீரியல், ஆரம்பத்தில் இருந்தே கேரளாவில் உள்ள சாலக்குடியில்தான் படமாக்கப்பட்டு வருகிறது. காரணம், இந்த அமானுஷ்ய தொடருக்கு ஏற்ற அடர்ந்த காட்டுப்பகுதி லொகேசன்கள் அந்த பகுதியில் அதிகமாக உள்ளதாம். அதனால் வெகுதூரம் செல்லாமல் அடுத்தடுத்த பகுதிகளிலேயே தொடர்ந்து படப்பிடிப்பு நடத்தப்பட்டு வருகிறதாம்.
அதன்காரணமாக, இந்த சீரியலில் நடிக்கும் நடிகர்களை நடிகைகளை சினிமா படப்பிடிப்புகளுக்கு அவுட்டோருக்கு அழைத்து செல்வது போன்று கூட்டிச்சென்று அங்கு ஹோட்டல்களில் தங்க வைத்து ஷூட்டிங் நடத்தி வந்தனர். இதன்காரணமாக ஆதிரா சீரியல் பட்ஜெட்கூட எகிறிக்கொண்டே போகிறதாம். ஆனால் அடுத்தபடியாக கதையில் சில மாற்றங்கள் ஏற்படப் போகிறதாம். அதனால், இதுவரை சாலக்குடியில் முகாமிட்டு ஆதிரா சீரியலை படம் பிடித்து வந்த சி.ஜே.பாஸ்கர், யூனிட்டுடன் விரைவில் சென்னை திரும்புகிறாராம். இனிமேல் சென்னையில்தான் படப்பிடிப்பு தொடரப்போகிறதாம்.