ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
ஆரண்யகாண்டம் படத்தில் ஒரு முதிர்ச்சியான வேடத்தில் நடித்து கலக்கியவர் சோமசுந்தரம். கூத்துப்பட்டறை நடிகரான இவர், அதையடுத்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய ஜிகர்தண்டா படத்தில் வில்லனாக நடித்த பாபி சிம்ஹாவுக்கு நடிப்பு கற்றுக்கொடுக்கும் ஆசிரியராக நடித்திருந்தார். அதன்பிறகு பாண்டியநாடு, 49ஓ, தூங்காவனம் உள்பட சில படங்களில் நடித்தவர் தற்போது நே, ஜோக்கர் ஆகிய படங்களில் நடித்துள்ளார். இதில் ஜோக்கர் படத்தில் கதையின் நாயகனாக நடித்திருக்கிறார் சோமசுந்தரம்.
மேலும், நே என்றொரு படத்தில் அவர் வடசென்னையைச்சேர்ந்த ரவுடியாக நடித்துள்ளாராம். முதலில் ஆக்சன் கேரக்டராக சித்தரிக்கப்பட்டுள்ள அவரது கேரக்டர் பின்னர் காமெடி கலந்த வில்லனாகி விடுகிறதாம். அதனால், இதற்கு முந்தைய படங்களில் கேரக்டர் நடிகராக தன்னை நிரூபித்த சோமசுந்தரம் இந்த படத்தில் வில்லன் மற்றும் காமெடியனாகவும் தன்னை முழுமையாக வெளிப்படுத்தியிருக்கிறாராம். குறிப்பாக, சென்னை தமிழில் படம் முழுக்க கலக்கல் செய்திருக்கிறாராம் சோமசுந்தரம்.