ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் |
'நிமிர்ந்து நில்' படத்தில் ஜெயம்ரவி ஜோடியாக நடித்தவர் ராகிணி திவேதி. கன்னடத்தில் முன்னணி நடிகை. நிமிர்ந்து நில் தவிர அறியான் என்ற படத்திலும் நடித்திருக்கிறார். சினிமாவில் ஹீரோயினாக நடிக்கும் ராகிணி, நிஜத்திலும் ஹீரோயினாக முயற்சி செய்கிறார். இதற்காக அவர் கடலுக்கு அடியில் நீந்தும் ஸ்கூபா பயிற்சி பெற்று வருகிறார். இதுபற்றி அவர் கூறியிருப்பதாவது:
தற்போது நிறைய ஆக்ஷன் படங்களில் நடிக்கிறேன். சினிமாவில் மட்டுமல்லாது நிஜ வாழ்விலும் ஆக்ஷன் ஹீரோயினாக இருக்க வேண்டும் என்பது என் ஆசை. இதன் முதல் கட்டமாக ஆஸ்திரேலியாவில் ஸ்கூபா பயிற்சி பெற்றேன். தற்போது மாலத்தீவில் அடுத்த கட்ட பயிற்சி பெற்று வருகிறேன். மனிதன் பார்வை படாத ஆழ்கடலுக்குள் தன்னந்தனியாக பயணிப்பது ஒரு தனி அனுபவம். மாலத் தீவை தொடர்ந்து இன்னும் சில நாடுகளிலும் இந்த பயிற்சியை தொடர்கிறேன். முழுமையான பயிற்சிக்கு பிறகு சான்றிதழ் தருவார்கள். அதன் பிறகு நான் மற்றவர்களுக்கு பயிற்சி அளிக்கலாம். அல்லது இது தொடர்பான போட்டிகளில் பங்கேற்கலாம். நான் இரண்டாவதை தேர்வு செய்ய முடிவு செய்திருக்கிறேன் என்கிறார் ராகிணி.