மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி |
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம், தமிழ்நாடு விநியோகஸ்தர்கள் கூட்டமைப்பு, தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர் சங்கம், ஆகிய 3 அமைப்புகளின் கூட்டுக் கூட்டம் நடந்தது. இதில் தெறி படம் தொடர்பாக கலைப்புலி தாணுவுக்கும் விநியோகஸ்தர்கள், தியேட்டர் அதிபர்களுக்கும் இடையே இருந்த பிரச்சினை பேசி தீர்க்கப்பட்டது.
திரைப்பட வளர்ச்சி தொடர்பான முடிவுகளை எடுக்கவும், அமைய இருக்கும் புதிய அரசிடம் பேசி திரைப்படத்துறைக்கு தேவையான சலுகைகளை பெற்றுத் தரவும், உயர்மட்ட திரைப்பட பாதுகாப்பு குழு அமைக்கப்பட்டது. இதன் தலைவராக திருப்பூர் சுப்பிரமணியமும், உறுப்பினர்களாக கலைப்புலி தாணு, அபிராமி ராமநாதன், ரோகினி பன்னீர் செல்வம் ஆகியோரும் நியமிக்கப்பட்டார்கள். ஒவ்வொரு வாரமும் இந்த குழு கூடி எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கும், குழுவின் முடிவே இறுதி முடிவாகவும் இருக்கும்.
மாதத்தில் ஒரு வாரம் சிறு பட்ஜெட் படங்கள் மட்டுமே வெளியிடுவது, திரைப்படங்களுக்கான அரசு மானியத்தை பெற்றுத் தருவது, திரைப்பட கட்டணத்தை முறைப்படுத்தி கனிணி மயமாக்குவது. நடிகர், நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்களிடம் தயாரிப்பாளர்கள் கொடுத்திருக்கும் முன்பணம் தொடர்பாக முடிவெடுப்பது, திரையரங்கின் உரிமத்தை 5 ஆண்டுக்கு ஒரு முறை புதுப்பிப்பது, தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள், திரையரங்க உரிமையாளர்களுக்கு ஏற்படும் அபிரிமிதமான நஷ்டத்தை தவிர்ப்பது என்ற இந்த 6 பிரச்சினைகள் குறித்து உயர்மட்ட பாதுகாப்பு குழு ஆலோசித்து முடிவெடுக்கும். இவ்வாறு கூட்டுக்கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.