ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
நட்சத்திர கிரிக்கெட் தொடர்பாக நடிகர் அஜி்த்திற்கும், நடிகர் சங்கத்திற்கும் மோதல் போன்ற செய்தி தொடர்ந்து வந்து கொண்டு இருக்கிறது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக நடிகர் சங்கம் சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. நடிகர் சங்க தலைவர் நாசர், துணை தலைவர் பொன்வண்ணன், பொதுச்செயலாளர் விஷால் மற்றும் பொருளாளார் கார்த்தி ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்தினர். அப்போது அவர்கள் பேசியதாவது...
எந்தவொரு பொது நிகழ்ச்சிகளிலும் பங்கேற்க மாட்டேன் என்ற கொள்கையுடன் நடிகர் அஜித் இருக்கிறார். ஆகையால் அவர் நட்சத்திர கிரிக்கெட்டில் பங்கேற்கவில்லை. மற்றபடி நடிகர் சங்கத்திற்கும், அஜித்திற்கும் எந்த பிரச்னையும் இல்லை. யாரோ சிலர் வாட்ஸ்-அப், பேஸ்புக் போன்ற சமூகவலைதளங்களில் வெளியான செய்திகளை எல்லாம் பத்திரிகைகளில் செய்தியாக வெளியிட்டுவிட்டார்கள். மேலும் நடிகர் சங்கம் கட்டடம் கட்ட ரூ.28 கோடி தேவைப்படுவதாகவும், இதை நான்கு கட்டங்களாக திரட்ட திட்டமிடப்பட்டிருப்பதாகவும் பொன்வண்ணன் கூறினார்.
நடிகர் சங்க கட்டடம் கட்ட பல்வேறு திட்டங்கள் உள்ளன. நன்கொடை வாங்கும் எண்ணம் உள்ளது, நடிகர்கள் எல்லோரும் சேர்ந்து படத்தில் நடிக்க தயாராக உள்ளார்கள். எல்லாவற்றுக்கும் மேலாக நடிகர் கமல்ஹாசன் உங்களுக்கு பக்க பலமாக நான் இருக்கிறேன், எல்லோரிடமும் பேசுவோம் என்று கூறியிருக்கிறார். அவர் இப்படி சொன்னது எங்களுக்கு பெரிய பலமாக அமைந்துள்ளது என கார்த்தி கூறினார்.
நடிகர் சங்கத்தை விட்டு சிம்பு விலகப்போவதாக அறிவித்துள்ளது குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு பதிலளித்த விஷால், நடிகர் சங்கம் என்பது ஆந்திரா கிளப்போ அல்லது வேறு ஏதாவது ஒரு கிளப்போ கிடையாது. இது கலைஞர்களின் சங்கம். சிம்புவின் நிலைப்பாட்டை நான் மதிக்கிறேன். ஆனால் நாங்கள் எந்த தவறும் செய்யவில்லை அதைமட்டும் உறுதியாக சொல்கிறேன் என்றார். மேலும் நடிகர்களின் முக்கியமான அறிவிப்புகளை பிஆர்ஓ., மூலம் வெளியிட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் விஷால் கூறினார்.
நடிகர் சங்கம் அரசியலுக்கு அப்பாற்பட்டது. ஆனால் அரசின் அரவணைப்பு நடிகர் சங்கத்திற்கு தேவை. வருகிற சட்டசபை தேர்தலில் நடிகர் சங்கத்தில் இருக்கும் 3500 உறுப்பினர்களும் தவறாது ஓட்டுப்போட வேண்டும். 100 சதவீத ஓட்டை பதிவு செய்ய வேண்டும். நடிகர் சங்கத்தின் பெயரை மாற்றுவது தொடர்பாக ரஜினி கூறியிருந்தார். ஆனால் அதில் சில சட்டசிக்கல்கள் உள்ளன என்று நாசர் கூறினார்.