ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
படப்பிடிப்பில் இருக்கும் போது ஒரு நாயகிக்கு கோபம் வந்தால் படப்பிடிப்பையே கேன்சல் செய்து விடுவார்கள். பேட்டி எடுக்கும் போது ஒரு நாயகிக்கு கோபம் வந்தால் பேட்டியைப் பாதியிலேயே முடித்துக் கொண்டு கிளம்பி விடுவார்கள். விழாக்கள் நடைபெறும் போது ஏதாவது கோபம் வந்தால் சொல்லாமல் கிளம்பி விடுவார்கள். இப்படித்தான் நாயகிகளின் கோபம் பற்றி காலம் காலமாகப் பார்த்து வருகிறோம்.
ஆனால், 'தெறி' நாயகி சமந்தாவுக்கு கோபம் வந்தால் இப்படி எதுவும் செய்ய மாட்டாராம். நேராக ஜிம்முக்குப் போய்விடுவாராம். தன்னுடைய மொத்த கோபத்தையும் ஜிம்மில்தான் இறக்கி வைப்பாராம். கடுமையான உடற்பயிற்சிகளை ஆவசேமாகச் செய்து தன்னுடைய கோபத்தைக் குறைத்துவிடுவாராம். வேர்வை சிந்த உடற் பயிற்சி செய்த பின் அந்தக் கோபம் தானாகவே போய்விடுமாம்.
ஒரு வேளை உடற்பயிற்சி செய்து உடலை வலிமையாக்கி, அதன் பின் ஆக்ஷனில் இறங்கி அந்தக் கோபத்தைக் காட்டுவாரோ ?....