ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
பரதன் இயக்கத்தில் விஜய் நடிக்கும் 60வது படத்தின் படப்பிடிப்பு கடந்த ஏப்ரல் 11-ந்தேதி சென்னையில் நடைபெற்றது. 3 நாட்கள் மட்டுமே நடத்தப்பட்ட படப்பிடிப்பு மே 2-ந்தேதி முதல் மீண்டும் சென்னையிலுள்ள பின்னி மில்லில் தொடர்ந்து நடைபெறுகிறது. அதையடுத்து ஜெட் வேகத்தில் படப்பிடிப்பு தொடங்குகிறதாம். மேலும், இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக 3 நாயகிகள நடிப்பதாக முன்பு கூறப்பட்ட நிலையில், பின்னர் நடந்த பூஜையில் கீர்த்தி சுரேஷ் மட்டுமே கலந்து கொண்டார். அதனால் ஒரே நாயகிதான் என்று கருதப்பட்டது.
ஆனால், இப்போது இன்னொரு நாயகியும் படத்தில் இருப்பதாக கூறப்படும் நிலையில், மலையாள நடிகை அபர்ணா வினோத் என்பவரும் ஒப்பந்தமாகியிருக்கிறாராம். சமீபத்தில் சென்னை சாலிகிராமத்திலுள்ள அப்படத்தின் அலுவலகத்துக்கு வந்த அவரை பல கோணங்களில் போட்டோ எடுத்து விட்டு கேரளத்துக்கு திருப்பி விட்டுள்ளனர். அந்த வகையில், அபர்ணா, விஜய்க்கு ஜோடியா அல்லது வேறு கேரக்டரில் நடிக்கிறாரா என்பது தெரியவில்லை. ஆனால் அவரும் விஜய் படத்தில் நடிப்பதாக சொல்கிறார்கள். இவர் மலையாளத்தில் நிஜன் நின்னோடு கூடையுண்டு என்ற படத்தில் நடித்துள்ளாராம்.
ஆக, மலையாள டைரக்டர் பரதன் இயக்கும் விஜய் படத்தில் ஏற்கனவே ஒரு மலையாள நடிகை கீர்த்தி சுரேஷ் இருக்க, இப்போது இன்னொரு மலையாள நடிகை அபர்ணா வினோத்தும் இணைந்திருக்கிறார். இவர்களோடு சேர்த்து இன்னும் எத்தனை மலையாள நடிகர் நடிகைகள் இடம்பெறப்போகிறார்களோ தெரியவில்லை.