ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
ஓகே கண்மணி படத்திற்கு பிறகு மணிரத்னம் இயக்கும் புதிய படத்தில் கார்த்திக் நடிப்பது உறுதியாகி விட்டது. அவருக்கு ஜோடியாக முதலில் சாய்பல்லவி நடிப்பதாக இருந்தது. தற்போது அவர் நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக பிரபல பாலிவுட் நடிகை அதிதிராவ் நடிக்கிறார்.
அதிதிராவ் பாலிவுட்டில் டெல்லி 6, ராக்ஸ்டார், மர்டர் 3, பாஸ், படங்களில் படு கவர்ச்சியாக நடித்தவர். 10 வருடங்களுக்கு முன்பு தமிழில் வெளிவந்த சிருங்காரம் படத்தில் தேவதாசியாக நடித்தவர் என்பது பலருக்கு தெரியாது. இந்த படம் சிறந்த மாநில மொழி படம், சிறந்த இசை, சிறந்த ஒளிப்பதிவு என 3 தேசிய விருதுகளை பெற்றது. சிருங்காரம் படத்திற்கு பிறகு தமிழில் வாய்ப்பு இல்லாததால் இந்திக்கு சென்றவர். அதன் பிறகு தமிழ் பக்கம் திரும்பவில்லை. தற்போது மணிரத்னம் படம் மூலம் மீண்டும் வருகிறார்.
இதன் படப்பிடிப்புகள் மே மாதம் காஷ்மீரில் தொடங்குகிறது. பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்கிறார். ஏ.ஆர்.ரகுமான் இசை அமைக்கிறார். தமிழில் குருதி பூக்கள் என்றும், தெலுங்கில் குருதி புஷ்பம் என்றும் பெயர் வைகக்கப்படலாம் என்று தெரிகிறது.