ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
கடந்த 2015-ம் ஆண்டு டிசம்பர் மாதம் சென்னையில் வரலாறு காணாத மழை கொட்டித்தீர்த்தது. இந்த மழை காரணமாக சென்னையிலுள்ள செம்பரம்பாக்கம் ஏரி தண்ணீர் திறந்து விடப்பட்டு சென்னை நகரமே தண்ணீரில் தத்தளித்தது. இதனால் பல பகுதிகளில் தண்ணீர் சூழ்ந்து மக்கள் வீடுகளை காலி பண்ணிவிட்டு சமூக கூடங்களில் தஞ்சமடைந்தனர். சில ஏரியாக்களில் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததால் வீட்டு மொட்டை மாடிகளில் மக்கள் தஞ்சமடைந்தனர். இதனால் அவர்கள் உணவு, குடிதண்ணீர் இல்லாமல் அவதிப்பட்டனர். அதையடுத்து ஹெலிகாப்டர்கள் மூலம் அவர்களுக்கு அவசரகால உதவிகள் வழங்கப்பட்டது.
அதையடுத்து பலரும் சென்னையை தத்தளிக்க வைத்த அந்த கனமழை முன்வைத்து வீடியோ ஆல்பங்கள் மற்றும் பாடல்கள் வெளியிட்டனர். அந்த வரிசையில் இப்போது நடிகர் விக்ரமும் ஸ்பிரிட் ஆப் சென்னை -என்றொரு வீடியோ ஆல்பம் ரெடி பண்ணினார். கிரினந்த் இசையமைத்துள்ள அந்த ஆல்பத்திலுள்ள பாடலுக்கு தான் மட்டுமின்றி முன்னணி நடிகர் நடிகைகளான பிரபுதேவா, சூர்யா, அபிஷேக்பச்சன், ஜீவா, ஜெயம்ரவி, கார்த்தி, விஜயசேதுபதி, சிவகார்த்திகேயன், பாபி சிம்ஹா, நயன்தாரா, அமலாபால், வரலட்சுமி என பலரை நடிக்க வைத்துள்ளார் விக்ரம். இந்த வீடியோ ஆல்பத்தை இன்று மாலை 6 மணிக்கு இணையதளத்தில் வெளியிடுகிறார் விக்ரம்.