ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
குக்கூ படத்தை இயக்கிய ராஜூமுருகன் அதையடுத்து தோழா படத்துக்கு டயலாக் எழுதினார். இப்போது ஜோக்கர் என்ற படத்தை இயக்கியிருக்கிறார். கம்யூனிச கருத்தை மையமாக வைத்து இந்த படம் உருவாகியிருக்கிறது. அரசியல்வாதிகள், வியாபாரிகள் மக்கள் எந்த அடிப்படையில் டார்க்கெட் செய்கிறார்கள் என்பதை மக்களுக்கு வெளிச்சம் போடும் படம் இது.
இந்த படத்தை இப்போது ட்ரீம் வாரியர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. ஆனால் இந்த படத்தை முதலில் தயாரிக்கயிருந்தவர் டைரக்டர் பாலாவாம். இதுபற்றி அவர் கூறுகையில், ஜோக்கர் படத்தை முதலில் நான்தான் தயாரிப்பதாக இருந்தது. ஆனால் நல்லவேளை நான் தயாரிக்கவில்லை. காரணம், நான் தயாரித்திருந்தால் இந்த அளவுக்கு பிரமாண்டமாக படத்தை தயாரித்திருக்க மாட்டேன். அதனால் அப்படம் ஒரு நல்ல தயாரிப்பாளரிடம்தான் போய் சேர்ந்திருக்கிறது.
மேலும், இந்த படத்தில் பணியாற்றியுள்ள அனைவருமே கள்ளம் கபடமில்லாத வெள்ளேந்தி மனிதர்களாக இருக்கிறார்கள். அந்த வகையில், ஒரு நல்ல கூட்டணி நல்ல எண்ணத்தோடு இந்த படத்தை எடுத்திருக்கிறார்கள். அதற்காகவாவது இந்த படம் வெற்றி பெற வேண்டும் என்றார் பாலா.