ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
தென்னிந்திய நடிகர் சங்க கட்டிட நிதிக்காக கடந்த 17ந் தேதியன்று நட்சத்திர கிரிக்கெட் போட்டி நடத்தப்பட்டது. இதில் ரஜினி, கமல் உள்ளிட்ட முன்னணி நடிகர் நடிகைகள் கலந்து கொண்டனர். நட்சத்திர கிரிக்கெட் போட்டி நஷ்டத்தில் முடிந்ததாகவும், அதற்கு தமிழக மக்களே பொறுப்பு என்று விஷால் கூறியதாகவும் சில இணைய தளங்களில் செய்தி வெளியானது. இதனை விஷால் மறுத்ததோடு விஷால் சார்பில் அவரது ரசிகர் மன்றத்தின் தலைவர் ஜி.ஜெயசீலன், செயலாளர் வி.ஹரி ஆகியோர் போலீசில் புகாரும் அளித்தனர்.
“நட்சத்திர கிரிக்கெட் போட்டி நல்ல முறையில் நடந்து முடிந்தது, இந்த போட்டி குறித்து விஷால் சொன்னதாக பல தவறான தகவல்களை சில இணைய தளங்கள் வெளியிட்டுள்ளது. அவர் அப்படி எந்த கருத்தையும் கூறவில்லை. போட்டி சிறப்பாக நடக்க உதவிய முதல்வர், தேர்தல், ஆணையர், காவல் துறை ஆணையர் ஆகியோருக்கு நன்றி மட்டுமே தெரிவித்துள்ளார். பொய்யான செய்தி வெளியிடும் இணைய தளங்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்” என்று அந்த புகார் மனுவில் தெரிவித்துள்ளர்.