ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
கவுண்டமணி நாயகனாக நடித்துள்ள படம் ''எனக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது''. இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. இதில் நடிகர் சந்தானமும் கலந்து கொண்டார். விழாவில் சந்தானம் பேசும்போது.... கவுண்டமணி சார் ஒரு காமெடி கிங், காமெடி டிப்போ. அவருக்கு இணை அவர் தான். அந்தக்கால அஜித் மாதிரி அவர், எந்த சினிமா விழாக்களிலும் பங்கேற்க மாட்டார் படத்தில் மட்டும் தான் பார்க்க முடியும். மற்ற காமெடியன்கள் எல்லோருமே அவரைதான் பின்பற்றுகிறார்கள். நானும் அவரை பின்பற்றிதான் காமெடி செய்தேன். குறிப்பாக, சில சமயங்களில் காமெடி காட்சிகளுக்கேற்ப டயலாக்குகள் கிடைக்காமல் தடுமாறுவேன். அப்போதெல்லாம் நான் கவுண்டமணி சார் நடித்த காமெடி காட்சிகளைப் போட்டுப்பார்த்து அதிலிருந்த சில விசயங்களை எடுத்து தான் நடிப்பேன், பேசுவேன். ஆக, எனது ஒவ்வொரு விசயங்களிலும் கவுண்டமணி சாரின் தாக்கம் இருக்கும்.
மேலும், இப்போது அவர் ஹீரோவாகி விட்டார் என்றாலும் அவருக்கே உரிய நக்கல் நய்யாண்டியை அவர் விடவில்லை. அதை இப்போதைய இளவட்ட ரசிகர்களும் ரசிப்பார்கள். என்னைப்போன்ற காமெடியன்களுக்கும்கூட கவுண்ட மணி சார் கவுண்டர் கொடுத்தால் சிரிக்காமல் இருக்க முடியவில்லை. டயமிங் காமெடியில் அவருக்கு இணை அவர் தான். அவரை யாராலும் நெருங்கவும் முடியாது. அவர் இடத்தை யாராலும் தொடவும் முடியாது என்றார்.