ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
'தெறி' திரைப்படம் தமிழ்ப் புத்தாண்டான ஏப்ரல் 14ம் தேதி உலகம் முழுவதும் வெளியானது. செங்கல்பட்டு ஏரியாவில் படம் வெளியாகாததால் சில பல கோடிகள் வசூல் பாதித்துவிட்டது. இருந்தாலும் அதையும் மீறி கடந்த நான்கு நாட்களில் மட்டும் தமிழ்நாட்டில் சுமார் 40 கோடி ரூபாய வசூலித்துள்ளதாக திரையுலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தமிழ்நாடு தவிர பிற தென்னிந்திய மாநிலங்களான கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் நான்கு நாட்களில் 16 கோடி ரூபாயும் வட இந்தியாவில் சுமார் 1 கோடி ரூபாயும் வெளிநாடுகளில் சுமார் 10 கோடி ரூபாயும் வசூலித்திருக்கலாம் என்கிறார்கள். வெளிநாடுகளில் அமெரிக்காவில் பிரிமீயர் காட்சியாக மட்டும் சுமார் 2 கோடி ரூபாய் வசூலித்துள்ளது. ஆக, மொத்தம் கடந்த நான்கு நாட்களில் உலகம் முழுவதும் 67 கோடி ரூபாய் வசூலாகியிருக்கலாம் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நான்கு நாட்களிலும் குடும்பத்துடன் ரசிகர்கள் வந்து பார்ப்பதால் அது இந்த வாரத்திலும் தொடர வாய்ப்புள்ளதாக திரையரங்க வட்டாரத்தினர் கருதுகிறார்கள். மற்ற முன்னணி நடிகர்களைக் காட்டிலும் விஜய்க்கு குட்டீஸ் ரசிகர்கள் அதிகம். இதைக் கடந்த நான்கு நாட்களிலும் பார்க்க முடிந்தது. எனவே, இந்த வார இறுதிக்குள் 'தெறி' படம் 100 கோடி ரூபாய் வசூலைக் கடக்க வாய்ப்புகள் அதிகம்.