ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது |
சினிமாவில் நம்பர்-ஒன் நடிகையாக இருந்தவர் தேவயானி. ஆரம்பத்தில் தொட்டா சிணுங்கி உள்ளிட்ட சில படங்களில் கிளாமராக நடித்தபோதும காதல் கோட்டைக்குப்பிறகு குடும்ப குத்து விளக்காகி விட்டார். அதையடுத்து நீண்டகாலம் சினிமாவில் பயணித்தவருக்கு திருமணத்திற்கு பிறகு வாய்ப்புகள் குறையவே சின்னத்திரையில் பிரவேசித்தார். அந்த வகையில், திருச்செல்வம் இயக்கிய கோலங்கள் தொடரில் தேவயானி நடித்த அபி என்ற கேரக்டர் அவரை சின்னத்திரையிலும் நம்பர்-ஒன்னாக்கியது.
அதையடுத்து, சினிமாவில் அவ்வப்போது நடித்துக்கொண்டே மஞ்சள் மகிமை, கொடிமுல்லை, முத்தாரம் போன்ற தொடர்களிலும் நடித்தார். இந்த நேரத்தில், தனது பிள்ளைகள் பயிலும் சர்ச் பார்க் கான்வென்டில் ஒரு ஆசிரியை விடு முறைக்கு செல்ல, அவர் இடத்தில் சில மாதங்கள் ஆசிரியையாக வேலை பார்த் தார் தேவயானி. விளைவு, அவர் முழுநேர ஆசிரியையாகி விட்டதாக செய்திகள் வெளியானது. அதனால் அதையடுத்து அவரை சினிமா, சின்னத்திரையில் நடிக்க புக் பண்ணுவது குறைந்து விட்டது.
இருப்பினும் சகாப்தம், ஸ்ட்ராபெர்ரி உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ள தேவயானி, சமீபத்தில் பாரதிதாசன் கல்லூரிக்கான ஒரு விளம்பர படத்தில் நடித்துள்ளார். இதையடுத்து மெகா சீரியல்களில் மீண்டும் நடிப்பதற்கும் தயாராக உள்ளாராம். தேவயானி தரப்பில் இருந்து இந்த செய்திகள் வெளியாகி தற்போது சின்னத்திரை வட்டாரத்தில் வேகமாக பரவிக்கொண்டிருக்கிறது.