ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
இறைவி எனக்கு ரொம்ப ரொம்ப ஸ்பெசலான படம் என்கிறார் அஞ்சலி. நாம் நிறைய படம் பண்ணுவோம். அப்படி நடிக்கிற எல்லா படங்களுமே மனதில் நிற்பதில்லை. ஆனால் இறைவி போன்ற படங்கள் இதயத்திற்கு நெருக்கமானவை. காலத்துக்கும் நினைவில் நிறைந்திருக்கும். அப்படியொரு அற்புதமான படம் இது. அங்காடித்தெருவுக்கு அப்புறம் நான் திருப்தியடைகிற வகையிலான படங்கள் அமையவில்லை. அப்படி அமைந்த படம் இந்த இறைவிதான். அதற்காக டைரக்டர் கார்த்திக் சுப்புராஜ்க்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.
மேலும், இந்த இறைவி படத்தை எந்த ஜானருக்குள்ளும் அடக்க முடியாது. இது ஒரு தனித்துவமான படம். டைரக்டர் கார்த்தியோட அடுத்த ஸ்டெப் இது. அதோடு இந்த படத்தில் சந்தோஷ் நாராயணனின் இசையும் சிறப்பாக உள்ளது. பாடல்களிலேயே கதை சொல்லப்பட்டிருக்கிறது. அதற்கு அவர் கொடுத்திருக்கும் வாய்ஸ் புதுமையாக உள்ளது. முக்கியமாக, பெண்களை பெருமைப் படுத்தும் விதத்தில் அமைந்துள்ள இந்த படத்தில் நானும் பெருமைக்குரிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன். அதனால்தான் இந்த படத்தை எனக்கு ரொம்ப ஸ்பெசல் என்கிறேன் என்கிறார் அஞ்சலி.