ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
ஐஸ்வர்யா ராஜேஷ் அறிமுகமான அவர்களும் இவர்களும் என்ற படத்தில் டபுள் ஹீரோயின் சப்ஜெக்ட்டில்தான் நடித்தார். அதன்பிறகு அட்டகத்தி, விளையாடவா, ரம்மி படங்களிலும் இரண்டாவது நாயகியாகவே நடித்தவர், விஜயசேது பதியின் பண்ணையாரும் பத்மினியும் படத்தில்தான் சிங்கிள் நாயகியாக நடித்தார். அதையடுத்து திருடன் போலீஸ், காக்கா முட்டை, ஆறாது சினம், ஹலோ நான் பேய் பேசுறேன் என பல படங்களில் சிங்கிள் நாயகியாக நடித்தவர், இடம் பொருள் ஏவல், தர்மதுரை, மனிதன் என சில படங்களில் இரண்டு ஹீரோயின்களில் ஒருவராகத்தான் நடித்துள்ளார்.
ஆனால் இந்த நிலையை தொடர அவர் விரும்பவில்லையாம். அதாவது, காக்கா முட்டை உள்ளிட்ட சில படங்களில் தனது நடிப்புத்திறமையை வெளிப்படுத்தி விட்டபோதும் இன்னும் தன்னை இரண்டு, மூன்று ஹீரோயின்களில் ஒருவராக டைரக்டர்கள் பார்ப்பதால் மனதளவில் பீல் பண்ணும் அவர், இனிமேல் இரண்டு ஹீரோயின் படங்களை குறைத்து சிங்கிள் ஹீரோயின் கதைகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்போகிறாராம். அதுமட்டுமின்றி, முன்றாம்தட்டு ஹீரோக்களின் படங்களை தவிர்த்து மேல்தட்டு ஹீரோக்களின் படங்களை கைப்பற்றும் முயற்சிகளிலும் இறங்கப்போகிறாராம் ஐஸ்வர்யா ராஜேஷ்.