ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
விக்னேஷ்சிவன் இயக்கத்தில் சிம்பு நடித்த படம் போடா போடி. இந்த படத்தில் பாலே டான்சராக அறிமுகமானார் வரலட்சுமி. முதல் படத்திலேயே படுகவர்ச்சியாக நடித்தும் இளவட்ட ரசிகர்களை மிரட்டினார். ஆனபோதும், அதன்பிறகு வர லட்சுமிக்கு உடனடியாக படமில்லை. சில ஆண்டுகளுக்குப் பிறகுதான் மதகஜராஜாவில் கமிட்டானார். அந்த படம் இப்போதுவரை கிடப்பில் கிடக்கிறது. அதையடுத்து பாலா இயக்கத்தில் நடித்த தாரைத்தப்பட்டை வரலட்சுமியை பெரிய அளவில் பேச வைத்தது. அதோடு, எந்தமாதிரியான கதாபாத்திரங்களை கொடுத்தாலும் தில்லாக நடிப்பார் என்கிற நம்பிக்கை ஏற்படுத்தியது.
அந்த படத்திற்கு பிறகு அர்ஜூன் நடிக்கும் நிபுணன், மலையாளத்தில் மம்மூட்டி நடிக்கும் கசபா ஆகிய படங்களில் நடித்து வருகிறார் வரலட்சுமி. இதையடுத்து அவர் ஆக்சன் கேரக்டர்களில் நடிக்க முயற்சி எடுத்து வருவதாக செய்திகள் பரவியுள்ளது? இதுபற்றி வரலட்சுமியை தொடர்பு கொண்டு கேட்டபோது, அழுத்தமான, அதிரடியான வேடங்களில் நடிக்க வேண்டும் என்கிற ஆசை ஏற்பட்டிருக்கிறது. ஆனால் ஆக்சன் வேடங்களுக்காக நான் முயற்சி எடுக்கவில்லை என்கிறார். மேலும், தாரைத்தப்பட்டை எனக்கு பெரிய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ள படம். அதனால் இனிமேல் இன்னும் அழுத்தமான வேடங்களில் ஸ்கோர் பண்ண வேண்டும் என்கிற ஆர்வம் ஏற்பட்டிருக்கிறது.
தற்போது நடித்து வரும் நிபுணன், கசபா படங்களிலும் எனக்கு வெயிட்டான வேடங்கள் தந்திருக்கிறார்கள். அதனால், இந்த படங்கள் வெளியாகும்போது எனது இமேஜ் இன்னும் பெரிய அளவில் உயரும் என்று எதிர்பார்க்கிறேன் என்கிறார் வரலட்சுமி.