சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் |
குற்றம் கடிதல் என்ற படத்தை இயக்கியவர் பிரம்மா. மாஸ்டர் அஜய், ராதிகா பிரசித்தா நடித்த அந்த படம் சிறந்த தமிழ் படத்துக்கான தேசிய விருது பெற்றது. அந்த படத்தில் ஒரு ஆசிரியையின் போராட்டத்தையும், மனவலியையும் தெளிவாக வெளிப்படுத்திய பிரம்மா, அதற்கடுத்தபடியாக அதையும் தாண்டி இன்னொரு அழுத்தமான கதையை படமாக்க வேண்டும் என்று திட்டமிட்டார். அந்த கதையில் யாரேனும் முன்னணி நடிகை நடித்தால் படத்தை பெரிய அளவில் ரீச் பண்ணலாம் என்பதால் அதையடுத்து 36 வயதினிலே படத்தில் நடித்திருந்த ஜோதிகாவை நடிக்க வைக்க முயற்சி எடுத்து அதற்கான பேச்சுவார்த் தையை தொடங்கினார்.
அப்போது பிரம்மா சொன்ன கதை ஜோதிகாவுக்கு மிகவும் பிடித்து விட்டதால் நடிப்பதற்கு சம்மதம் தெரிவித்தார். அதையடுத்து ப்ரீ புரொடக்சன்ஸ் வேலைகளை தொடங்கியிருக்கிறார் பிரம்மா. அவரிடத்தில் ஜோதிகா நடிக்கும் படத்தைப்பற்றி கேட்டபோது, இதுவும் குற்றம் கடிதல் போன்று ஒரு நல்ல விசயத்தை முன்னிறுத்தி உருவாகிறது. ஜோதிகா முக்கிய வேடத்தில் நடிப்பதால் இந்தபடம் பெரிய அளவில் பேசப்படும். அதனால் வலுவான கதையுடன் களமிறங்குகிறேன். அதேசமயம் கமர்சியல் விசயங்களும் போதுமான அளவு படத்தில் இருக்கும். இந்த படம் குறித்த தகவல்களை இன்னும் 15 நாட்களுக்குள் முறையாக அறிவிப்பேன். அதையடுத்து படப்பிடிப்பு தொடங்கும் என்கிறார் டைரக்டர் பிரம்மா.