ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
ஆஸ்கார் விருது விழாவில் இந்தியா சார்பில் கலந்து கொண்டது, அமெரிக்காவிலும் அதிக ரசிகர்களை பெற்றது, அமெரிக்க அதிபர் ஒபாமாவுடன் விருந்து சாப்பிட அழைக்கப்பட்டது என சமீப காலமாக பல கவுரவங்களையும் பெற்று வருபவர் பிரியங்கா சோப்ரா. தற்போது இவருக்கு மற்றொரு கவுரவமாக, தாதாசாகிப் பால்கே திரைப்பட அறக்கட்டளையின் சிறந்த நடிகை விருதும் கிடைத்துள்ளது.
இந்த அறக்கட்டளையின் கீழ் பிரியங்கா பெறும் இரண்டாவது விருது இதுவாகும். இதற்கு முன் 2011ம் ஆண்டு சாத் கோன் மாஃப் படத்திற்காக அதிகம் மறக்க முடியாத நடிப்பிற்கான விருதை பெற்றார். தற்போது தாதாசாகிப் பால்கேயின் 147 வது ஜெயந்தியை முன்னிட்டு தாதாசாகிப் திரைப்பட அறக்கட்டளை விருதுகளை வழங்க உள்ளது. இதில், இந்த ஆண்டிற்கான சிறந்த நடிகை விருதிற்கு பிரியங்கா சோப்ரா தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்த விருது வழங்கும் விழா மும்பையில் ஏப்ரல் 24ம் தேதி நடக்க உள்ளது.