ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
சினிமா சூட்டிங்கை வேடிக்கை பார்த்தபோது படத்தின் ஹீரோ நகுலை கிண்டல் செய்த சட்டக்கல்லூரி மாணவர் தாக்கப்பட்டார். செங்கல்பட்டு ரெயில்நிலையத்தில் உள்ள 5வது பிளாட்பாரத்தில் ஆஸ்கார் பிலிம்ஸ் தயாரிப்பில் நடிகர் நகுல் ஹீரோவாக நடிக்கும் புதிய படத்தின் சூட்டிங் நடந்தது. இன்னமும் பெயரிடப்படாத இந்த படத்தில் நகுல் சம்பந்தப்பட்ட காட்சிகள் ரெயில் நிலையத்தில் படமாக்கப்பட்டபோது, செங்கல்பட்டு சட்டக்கல்லூரி மாணவர்கள் சுமார் 150 பேர் கல்லூரி முடிந்து வீட்டிற்கு செல்வதற்காக ரெயில் நிலையத்திற்கு வந்தனர்.
சினிமா சூட்டிங்கை பார்த்ததும் மாணவர்களில் ஒரு பகுதியினர் வேடிக்கை பார்க்கத் தொடங்கினர். அப்போது கமலக்கண்ணன் என்ற மாணவர் நடிகர் நகுலை கிண்டல் செய்ததாக தெரிகிறது. அதை கவனித்த சினிமா ஸ்டண்ட் மாஸ்டரான செல்வம், மாணவரை கடுமையான வார்த்தைகளால் பேசி கண்டித்துள்ளார். இதனால் மாணவர்கள் அனைவருமே கடும் கோபமடைந்து ஸ்டண்ட் மாஸ்டரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அவர் சினிமாவில்தானே ஹீரோ... நிஜத்தில் இல்லையே... அப்படியென்ன எங்கள் நண்பர் தவறாக கூறிவிட்டாரென்று இப்படி திட்டுகிறீர்கள், என்று ஸ்டண்ட் மாஸ்டரை சூழ்ந்து கொண்டனர். அப்போது ஆத்திரமடைந்த ஸ்டண்ட் மாஸ்டர் செல்வம், மாணவர் கமலக்கண்ணனை அடித்துள்ளார். இதைத்தொடர்ந்து மாணவர் கமலக்கண்ணன் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
செல்வத்துக்கு ஆதரவாக சினிமா படப்பிடிப்பு குழுவினர் திரண்டு வந்தனர். மாணவர் தாக்கப்பட்டதை அறிந்த மற்ற மாணவர்கள் திடீர் ரெயில் மறியலில் ஈடுபட்டனர். சம்பவம் பற்றி கேள்விப்பட்ட போலீசார் அங்கு விரைந்து வந்து மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதன் பின்னர் மாணவர்கள் போராட்டத்தை கைவிட்டனர். சினிமா படப்பிடிப்பு குழுவினர் மற்றும் சட்டக்கல்லூரி மாணவர்கள் மோதலால் சுமார் அரை மணி நேரம் ரெயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்த மோதல் தொடர்பாக ஸ்டண்ட் மாஸ்டர் செல்வத்திடம் ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.