14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா |
கோலிவுட் மட்டுமல்ல பாலிவுட்டிலும் த்ரில்லர் படத்திற்கு எப்போதும் மவுசு அதிகம். இயக்குநர் ரிபு தாஸ்குப்தா அடுத்தப்படியாக 'டிஇ3என்' TE3N என்ற படத்தை இயக்குகிறார். த்ரில்லர் படமாக இப்படம் உருவாக இருக்கிறது. இப்படத்தின் கதையை இயக்குநர் ரிபு, கரீனாவை மனதில் வைத்து தான் எழுதினாராம். அதன்படி அவரிடம் இந்த கதையை சொல்லி இப்போது ஓகேயும் வாங்கிவிட்டார். ஜூன் மாதம் முதல் படப்பிடிப்பு ஆரம்பமாக இருக்கிறது.
'டிஇ3என்' த்ரில்லர் கதையாக மட்டுமல்லாது கரீனாவை முன்னிலைப்படுத்தி உருவாகிறது, அதனால் தான் அவர் இப்படத்தில் நடிக்க சம்மதித்தாராம். இந்தப்படத்திற்காகத்தான் கரீனா, ராஜ்குமார் குப்தாவின் '84' மற்றும், சஞ்சய் குப்தாவின் 'காபில்' படத்தை வேண்டாம் என்று கூறியதாக கூறப்படுகிறது.