ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
சட்டம் ஒரு இருட்டறையில் தனது கலைப்பயணத்தை தொடங்கியவர் புரட்சி இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகரன். நடிகர் விஜய்யின் தந்தையான இவர், பல மொழிகளிலும் நிறைய படங்களை இயக்கினார். விஜய்யை வைத்து நாளைய தீர்ப்பு, தேவா, விஷ்ணு, ரசிகன், நெஞ்சினிலே போன்ற படங்களை இயக்கியிருக்கிறார். ஒரு கட்டத்தில் படங்கள் இயக்குவதை நிறுத்தியவர், சில படங்களுக்கு கதை வசனம் எழுதுவது, தயாரிப்பது என்று தொடர்ந்து வந்தவர், டூரிங் டாக்கீஸ், நையப்புடை போன்ற படங்களில் நடிகரானார். இந்த படங்கள் வெற்றி பெறவில்லை என்றபோதும், தொடர்ந்து நடிப்பதில் ஆர்வம் காட்டி வருகிறார் எஸ்.ஏ.சந்திர சேகரன்.
அந்த வகையில், தனுஷ் முதன்முறையாக இரண்டு வேடங்களில் நடித்துள்ள கொடி படத்தில் அவரும் நடித்திருக்கிறார். இந்த படத்தில் மூத்த அரசியல்வாதியாக தனுஷின் காட் பாதராக நடித்திருக்கிறார் எஸ்.ஏ.சந்திரசேகரன். கதைப்படி தனுசுக்கு அரசியல் சொல்லிக்கொடுக்கும் ஆசானாக நடித்துள்ள அவருக்கு நிறைய காட்சிகள் உள்ளதாம். இதையடுத்து, இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி நடித்து வரும் எமன் படத்திலும் ஒரு கெஸ்ட் ரோலில் நடிக்க எஸ்.ஏ.சியிடம் பேசியுள்ளார்களாம். மேலும், தற்போது முழுநேர நடிகராகி விட்ட அவர், தன்னை சந்திக்கும் டைரக்டர்களிடம் பெரிய கேரக்டரில்தான் நடிப்பேன் என்றில்லை. சில காட்சிகளில் வரும் கேரக்டராக இருந்தாலும் நடிக்க தயாராக இருக்கிறேன் என்றும் முன்மொழிந்து வருகிறார் விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகரன்.