ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும், பாயும்புலி, ஆறாது சினம் போன்ற படங்களில் நடித்தவர் ஐஸ்வர்யா தத்தா. பஞ்சாபி நடிகையான இவர் தற்போது மறைந்திருந்து பார்க்கும் மர்மமென்ன, முடிசூடா மன்னன் உள்பட சில படங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில், துருவாவுக்கு ஜோடியாக ஐஸ்வர்யா தத்தா நடித்து வரும் மறைந்திருந்து பார்க்கும் மர்மமென்ன படத்தில் தனக்கு வரவேண்டிய சம்பளம் சொன்னபடி வராததால் அந்த படத்திற்கு கொடுத்திருந்த கால்சீட்டை விக்ரம்பிரபுவின் முடிசூடா மன்னன் படத்திற்கு கொடுத்து நடித்ததாக அவர் மீது புகார் எழுந்திருக்கிறது.
இதுபற்றி ஐஸ்வர்யா தத்தாவைக்கேட்டால், மறைந்திருந்த பார்க்கும் மர்மமென்ன படப்பிடிப்புக்கு நான் செல்லாதது உண்மைதான். ஆனால் அதற்கு காரணம் அவர்கள் சம்பளம் தரவில்லை என்பதற்காக அல்ல. வெளியூரில் இருந்த எனது மேனேஜர்தான் சரியான கம்யூனிகேசன் இல்லாமல் அந்த படத்திற்கு கொடுத்திருந்த தேதியில் என்னை முடிசூடா மன்னன் படத்திற்கு அனுப்பி விட்டார். அங்கு சென்று நடித்துக்கொண்டிருந்தபோதுதான் துருவா படப்பிடிப்பில் இருந்து எனக்கு போன் வந்தது. அப்போதுதான் எனது மேனேஜர் கால்சீட்டை தவறுதலாக சொல்லி சொதப்பி விட்டார் என்பது எனக்கு தெரிய வந்தது. மற்றபடி நான் வேண்டுமென்றே மறைந்திருந்து பார்க்கும் மர்மமென்ன படக்குழுவை டீலில் விடவில்லை.
அதோடு, இதற்கு முன்பு நான் நடித்த படங்களில் எனக்கு பெரிய அளவிலான கதாநாயகி வேடங்கள் தரப்படவில்லை. ஆனால் இந்த படத்தில்தான் நான் லீடு ரோலில் நடிக்கிறேன். அதனால் மறைந்திருந்து பார்க்கும் மர்மமென்ன எனக்கு முக்கியமான படமாகும். வளர்ந்து வரும் எனக்கு லீடு ரோலில் நடிக்க வாய்ப்பு கிடைப்பது பெரிய விசயம். அப்படியொரு வாய்ப்பை நான் வீணடிக்க நினைப்பேனா என்று விளக்கம் கொடுக்கிறார் ஐஸ்வர்யா தத்தா.