ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் |
சினிமாவின் போக்கு மாறி வரும் இந்த காலகட்டத்தில் கவர்ச்சி காட்டுவதில் தப்பே இல்லை என்று நடிகை மல்லிகா கூறியுள்ளார். ஆட்டோகிராப், திருப்பாச்சி உள்ளிட்ட படங்களில் நடித்திருப்பவர் நடிகை மல்லிகா. தமிழில் வாய்ப்பு இல்லாததால் மலையாள படங்களில் நடிக்கத் தொடங்கினார். கன்னடப் பட உலகையும் விட்டு வைக்காத மல்லிகா, இப்போது தமிழில் வாய்ப்பு வேட்டையில் இறங்கியிருக்கிறார்.
அறிமுக நாயகிகள் எல்லோரும் படு கவர்ச்சியாக நடிக்க தயாராக இருப்பதால் அம்மணியும் கவர்ச்சிக்கு தயார் என்ற ஸ்டேட்மெண்ட்டுடன், கிளாமரான ஸ்டில்களை கோடம்பாக்கத்தில் உலவ விட்டிருக்கிறார். இதுபற்றி அவர் அளித்துள்ள பேட்டியில், கதையோடு கூடிய கவர்ச்சி என்றால் கவர்ச்சி காட்டுவதில் தப்பில்லை. ஒவ்வொரு நாளும் சினிமாவின், வளர்ச்சியும் போக்கும் மாறி மாறி நிகழ்கின்றது. வேகமான வளர்ச்சிக்கும் நிறைவான நடிப்பிற்கும் ரசிகர்களின் ஆதரவிற்கும் என்ன தேவையோ அதை நடிகைகள் உணர்ந்து செயல்பட வேண்டும். ஆகவே திரையுலக பயணத்தில் எனக்கென்று ஒரு பாதை அமைப்பதை விட, படம் பார்ப்பவர்களின் எதிர்பார்ப்பிற்கும், இயக்குநர்களின் கற்பனைக்கும் ஏற்ப நடிப்பதே நல்லது, என்றார்.