ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது |
ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த், அக்ஷய்குமார், எமி ஜாக்சன் மற்றும் பலர் நடித்து வரும் படம் '2.0'. இந்தப் படத்தின் படப்பிடிப்பு கடந்த பத்து நாட்களக்கும் மேலாக டெல்லியில் நடைபெற்று வருகிறது. முதலில் அக்ஷய்குமார் சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்டன. சில நாட்களுக்கு முன்பிருந்து ரஜினிகாந்தும் படப்பிடிப்பில் கலந்து கொண்டு வருகிறார். தமிழ்த் திரையுலகில் ஏன் இந்தியத் திரையுலகில் இதுவரை இல்லாத அளவிற்கு மிகப் பெரும் பட்ஜெட்டில் இப்படம் தயாராகி வருகிறது. ஒரே சமயத்தில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் இப்படத்தை வெளியிட உள்ளனர்.
படப்பிடிப்பு மட்டுமே சுமார் ஒரு வருட காலத்திற்கும் மேல் நடைபெறும் என்று தெரிகிறது. '2.0' படத்தின் முதல் பாகமான 'எந்திரன்' படத்தை விட இப்படத்தில் பல பிரம்மாண்டமான காட்சிகள் இடம் பெற்றுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. சரியான திட்டமிடலுடன் இயக்குனர் ஷங்கர் படத்தைப் படமாக்கி வருவதால் குறித்த நேரத்தில் எந்தத் தாமதமும் இல்லாமல் படம் தயாராகிவிடும் என்கிறார்கள். தற்போதைய தகவல்படி படத்தை 2017ம் ஆண்டு தீபாவளிக்கு வெளியிடலாமா என்று படக்குழுவினர் யோசித்து வருகிறார்களாம். அப்படியென்றால் ரஜினி ரசிகர்களுக்கு அடுத்த வருட தீபாவளிக் கொண்டாட்டம் டபுளாக இருக்கப் போகிறது.