ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் |
நடிகர் சங்கம் கட்டடம் கட்ட, நடத்தப்பட இருக்கும் நட்சத்திர கிரிக்கெட் போட்டியில், அணிகளுக்கு, தமிழ்நாட்டின் முக்கிய மாவட்டங்களின் பெயர் சூட்டப்பட்டுள்ளது. நாசர், விஷால் தலைமையிலான புதியவர்கள் நடிகர் சங்கத்திற்கு பொறுப்பேற்ற பின்னர் பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். அதில் தேர்தலின் போது அவர்கள் சொன்ன முக்கியமான வாக்குறுதி நடிகர் சங்கம் கட்டடம் கட்டுவது. தற்போது அந்த பணிகள் முழுவீச்சில் ஆரம்பமாகிவிட்டன. முதற்கட்டமாக நடிகர் சங்க கட்டடம் கட்ட பணம் தேவைப்படுவதால் நட்சத்திர கிரிக்கெட் நடத்துகிறார்கள்.
வருகிற ஏப்., 17ல், சென்னை, சேப்பாக்கம் மைதானத்தில், நட்சத்திர கிரிக்கெட் போட்டிகள் நடைபெற உள்ளன. இதில், அமிதாப், சிரஞ்சீவி, ரஜினிகாந்த், கமல் உள்ளிட்ட இந்திய திரை உலகின், சூப்பர் ஸ்டார்கள் பங்கேற்க உள்ளனர். போட்டியில் பங்கேற்கும், எட்டு அணிகளுக்கும், தமிழகத்தின் முக்கிய மாவட்டங்களின் பெயர்கள் சூட்டப்பட்டுள்ளன.
மதுரை காலேஜ், சென்னை சிங்கம்ஸ், நெல்லை டிராகன்ஸ், தஞ்சை வாரியர்ஸ், திருச்சி டைகர்ஸ், ராம்நாடு ரைனோஸ், கோவை கிங்ஸ், சேலம் சீட்டாஸ் என, கிரிக்கெட் அணிகளுக்கு, தங்கிலீஷில் பெயர் சூட்டப்பட்டுள்ளது. எட்டு அணிகளின் கேப்டன்களாக, சூர்யா, விஷால், கார்த்தி, ஜெயம் ரவி, சிவகார்த்திகேயன், ஆர்யா, விஜய் சேதுபதி, ஜீவா ஆகியோர் விளையாட உள்ளனர். இதில் எந்த அணிக்கு யார் கேப்டன் என்பதற்கான பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. அதோடு ஒவ்வொரு அணிக்கும் வீரர்கள் தேர்வும் நடைபெறுகிறது. மேலும் போட்டியின் விளம்பர தூதர்களாக அனுஷ்கா, நயன்தாரா, த்ரிஷா, காஜல் அகர்வால், சமந்தா உள்ளிட்டோர் நியமிக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.
ரஜினி, கமல், அமிதாப், விஜய் உள்ளிட்ட திரையுலக பிரபலங்கள் பலர் இந்த கிரிக்கெட் போட்டியில் கலந்து கொள்ள இருப்பதால் இதை பிரமாண்டமாக நடத்த நடிகர் சங்கம் திட்டமிட்டுள்ளது.