ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
தமிழ்த் திரையுலகத்தில் கடந்த சில வருடங்களாகவே பேய்களைப் பார்த்துத்தான் ரசிகர்கள் பயந்து கொண்டிருக்கிறார்கள். வெளிவரும் பெரும்பாலான பேய் படங்களில் ஒரு வீடு, அந்த வீட்டுக்குள் இருக்கும் ஒரு பேய், அந்தப் பேயிடம் சிக்கிக் கொள்ளும் சில பேர் என்ற கதைதான் இருக்கிறது. வழக்கம் போல இருட்டான அறை, சத்தம் போடும் கதவுகள், திடீரென யாரோ போவது போல் தோன்றுவது, கொலு சுத்தம் இவைகள் இல்லாமல் எந்த ஒரு பேய்ப் படத்தையும் நம்மால் பார்க்க முடியாது. அப்பாடா, பேய்ப் பட சீசன் முடிந்து விட்டதே என நாம் நினைத்தால், அது எப்படி அவ்வளவு சீக்கிரம் போய் விடுவோமா என இன்னமும் தொடர்ந்து கொண்டிருக்கிறது.
நாளை கூட 'டார்லிங் 2, ஹலோ நான் பேய் பேசுறேன்' ஆகிய பேய்ப் படங்கள் வெளிவர இருக்கின்றன. சந்தானம் தற்போது ஹீரோவாக நடித்து முடித்துள்ள 'தில்லுக்கு துட்டு' படமும் பேய்ப் படம்தானாம். ஆனால், பேய்களைப் பார்த்து நாமும் பயப்படப் போவதில்லை, படத்தில் நடிப்பவர்களும் பயப்படப் போவதில்லையாம். மாறாக, பேய்கள்தான் மற்றவர்களைப் பார்த்து பயப்படப் போகிறதாம். இதை வைத்துத்தான் 'தில்லுக்கு துட்டு' படத்தின் கதையை உருவாக்கியிருக்கிருக்கிறார்களாம்.
விஜய் டிவியில் சந்தானம் நடிகராக அறிமுகமான 'லொள்ளு சபா' நிகழ்ச்சியை இயக்கிய ராம்பாலா 'தில்லுக்கு துட்டு' படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார்.