ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது |
அட்லி இயக்கத்தில் விஜய் நடித்திருக்கும் 'தெறி'யின் கேரள விநியோக உரிமையை நடிகர் பிருத்திவிராஜின் 'ஆகஸ்ட் சினிமாஸ்' நிறுவனம் வாங்கியிருப்பதாக தகவல் வெளியானது. அது உண்மை அல்ல, தவறான தகவல் என தற்போது தெரிய வந்திருக்கிறது. மலையாள நடிகையும், மலையாளத் திரைப்பட தயாரிப்பாளருமான சாந்த்ரா தாமஸ் மற்றும் விஜய்பாபு ஆகியோரின் 'ஃபிரைடே ஃபிலிம்ஸ்' மற்றும் 'கார்ணிவல் பிக்சர்ஸ்' நிறுவனங்கள் தான் 'தெறி' படத்தின் கேரள உரிமையை வாங்கி இருக்கிறது.
5.6 கோடி ரூபாய் கொடுத்து 'தெறி' படத்தின் கேரள உரிமையை இந்த நிறுவனம் வாங்கி இருக்கிறது என்ற தகவலும் தற்போது வெளியாகியுள்ளது. இந்த வியாபார விஷயத்தில் பிருத்விராஜின் பெயர் அடிபட்டதாலோ என்னவோ, 'தெறி'யின் தயாரிப்பாளர் 'கலைப்புலி' எஸ்.தாணுவை நடிகை சாந்த்ரா தாமஸும், விஜய்பாபுவும் சந்தித்தபோது எடுக்கப்பட்ட புகைப்படத்தை வெளியிட்டு உண்மைத் தகவலை ஊர்ஜிதப்படுத்தி உள்ளனர்.
தமிழ் புத்தாண்டு தினமான ஏப்ரல் 14-ஆம் தேதிதான் மலையாளப் புத்தாண்டு பண்டிகையான விஷுவும் வருகிறது. அதனால் விஜய் நடித்த 'தெறி' படத்தை ஏப்ரல் 14 அன்றே கேரளாவில் மிகப் பிரம்மாண்டமான முறையில் வெளியிட திட்டமிட்டுள்ளார் சாந்த்ரா தாமஸ்.