ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
உதிரிப்பூக்கள், முள்ளும் மலரும், ஜானி, நெஞ்சத்தை கிள்ளாதே போன்ற புகழ்பெற்ற படங்களை இயக்கியவர் மகேந்திரன். தற்போது அவர் விஜய் நடிக்கும் தெறி படத்தில் வில்லனாக நடித்து வருகிறார். தெறியில் வில்லத்தனம் செய்யும் அரசியல்வாதியாக நடித்துள்ளார்.
தெறி படத்திற்கு பிறகு தொடர்ந்து நடிக்கும் ஆர்வத்தில் மகேந்திரன் இருந்தாலும் அவரது கனவு படம் ஒன்றை இயக்கும் திட்டத்தில் இருக்கிறார். அது ஹீரோயின் சப்ஜெக்ட், இதற்காக நடிகர் நடிகைகளை அவர் அணுகியபோது ஹீரோயின் ஒருவர் ஓகே சொல்லிவிட்டார். ஆனால் ஹீரோக்கள்தான் நடிக்க தயக்கம் காட்டுகிறார்களாம். காரணம் கதை முழுவதும் ஹீரோயின் மீது பயணம் செய்து ஹீரோயின் மீதே முடிகிறதாம். இதனால் தங்களுக்கு முக்கியத்தும் இல்லை என்று தயங்குவதாக தெரிகிறது. தெறி படத்தின் மூலம் நடிகராக வெற்றி பெற்று விட்டால் தனது கனவு படத்தில் தானே நடிப்பது என்றும் மகேந்திரன் முடிவு செய்திருக்கிறார்.