மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி |
தலைவாசல், அமராவதி, கர்ணா, நான் அவனில்லை உள்பட பல படங்களை இயக்கியவர் செல்வா. கஸ்தூரி கவர்ச்சிகரமாக நடித்த நாங்க என்ற படத்திற்கு பிறகு நாடி துடிக்குதடி, வணங்காமுடி, முறியடி என சில படங்களை அவர் இயக்கினார். ஆனால் அந்த படங்கள் சில பிரச்சினைகளால் வெளியாகவில்லை. இந்த நிலையில், சில முன்னணி ஹீரோக்களிடம் அவர் கால்சீட் கேட்டார். ஆனால் யாரும் தர முன்வரவில்லை. அதனால் இப்போது பரத்திடம் அவர் கால்சீட வாங்கியிருக்கிறார்.
அதோடு, சில கமர்சியல் நடிகர்களை ஒப்பந்தம் செய்துள்ள அவர், அந்த படத்தில் ஹீரோயினாக நடிக்க மார்க்கெட்டில் இருக்கும் சில நடிகைகளிடம் பேசி வந்தார். ஆனால் இந்தசேதி வெளியில் கசிந்ததை அடுத்து இப்போது இனியா, அருந்ததி போன்ற நடிகைகள் அந்த படத்தை கைப்பற்ற திரைக்குப்பின்னால் தீவிரம் காட்டி வருகிறார்களாம். அதோடு சம்பள விசயத்தில் கறாராக இருக்காமல் வாய்ப்பு கிடைத்தால் போதும் என்று இருவரும் வரிந்து கட்டியிருக்கிறார்களாம்.