ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
சென்னை: குழந்தைகள் கடத்தலை தடுக்க, போலீசார் தீவிர கவனம் செலுத்தி கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சென்னை, போலீஸ் கமிஷனரிடம் புகார் அளித்த நடிகர் பார்த்திபன் வலியுறுத்தியுள்ளார். சினிமா இயக்குனரும், நடிகருமான பார்த்திபன், நேற்று மாலை, சென்னை போலீஸ் கமிஷனர் ராஜேந்திரனிடம் அளித்த புகார்...
சென்னை, வால்டாக்ஸ் சாலை நடைபாதையில் வசித்து வரும் பெருமாள், லட்சுமி தம்பதியின், ஆறு மாத பெண் குழந்தையை, பிப்ரவரியில், மர்ம நபர்கள் கடத்தி உள்ளனர். ஆண் குழந்தை சட்டக்கல்லூரி காவல் நிலையம் அருகே நடைபாதையில் வசித்து வரும், விமல், மேத்தா தம்பதியின், எட்டு மாத ஆண் குழந்தை, மர்ம நபர்களால் கடந்த வாரம் கடத்தப்பட்டு உள்ளது. 2015ல், தமிழகத்தில், 656 குழந்தைகள் கடத்தப்பட்டுள்ளனர்; அதில், 305 பெண் குழந்தைகள்.
மிருகத்தனமாக... காட்டில், தன் குட்டிகளை காக்க மிருகங்கள் படும்பாட்டை விட, வல்லரசாகப் போகும் நம் நாட்டில் குழந்தைகளை கடத்துவோரை, காவல் துறை மிருகத்தனமாக தண்டிக்க வேண்டும். குழந்தைகள் கடத்தலை தடுக்க, நடிகர் ரஜினிகாந்த் மனைவி, லதா ரஜினிகாந்த் நடத்தி வரும் தயா பவுண்டேஷன், என் மனிதநேய மன்றம், எக்ஸ்னோரா தலைவர் நிர்மலும் இணைந்து, அபயம் என்ற அமைப்பை உருவாக்கி உள்ளோம்; தமிழகம் முழுவதும் விழிப்புணர்வு பிரசாரம் செய்ய உள்ளோம்.இவ்வாறு பார்த்திபன் கூறி உள்ளார்.
அம்மா குழந்தைகள் காப்பகம்
நடிகர் பார்த்திபன் கூறியதாவது: நடைபாதைவாசிகளின் வாரிசுகள் நலன் காக்க, அம்மா குழந்தைகள் நல காப்பகம் துவங்க வேண்டும் என, முதல்வருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளேன். நான், சமூக பிரச்னைகளை சொந்த பிரச்னையாக கருதுபவன். பாரிமுனையில் குழந்தை கடத்தல் நடந்த இடத்தை, ஆட்டோவில் சென்று பார்த்தேன்; மனம் வலித்தது.
குழந்தை கடத்தலை தடுப்பது, மீட்பதில் லதா ரஜினிகாந்த் பொறுப்புடன் செயல்படுகிறார். பத்திரிகைகளில் படத்துடன் வந்த செய்தியை படித்துவிட்டு, கண்ணீர் விட்டு கதறியபடி, இதற்கு ஒரு முடிவு கட்ட வேண்டும் என்றதும், நானும் கலங்கிவிட்டேன்; பெரிய அளவில் விழிப்புணர்வு பிரசாரம் செய்வோம்.இவ்வாறு பார்த்திபன் கூறினார்.