ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
நயன்தாராவின் காதலரான விக்னேஷ்சிவன் இயக்கிய நானும் ரௌடிதான் படம் கமர்ஷியலாக பெரிய வெற்றிபெற்றதாக சொல்லப்பட்டது. அப்படத்தின் தயாரிப்பாளரான தனுஷோ, நானும் ரௌடிதான் படம் போட்ட முதலீட்டை மட்டுமே வசூல் பண்ணியதாக சொன்னார். என்றாலும் நானும் ரௌடிதான் படம் விக்னேஷ்சிவனுக்கு நல்ல பெயரைத் தேடிக் கொடுத்தது. இதை வைத்து அடுத்து பெரிய ஹீரோவை வைத்து படம் பண்ணலாம் என்று எண்ணிய விக்னேஷ் சிவன், அஜித்திடம் சப்ஜெக்ட் சொல்ல முயற்சி செய்துள்ளார்.
அஜித் தரப்பிலிருந்து பாசிட்டிவ்வான பதில் வரவில்லையாம். எனவே மேலும் அவருக்காக உட்கார்ந்திருந்தால் வேலைக்கு ஆகாது என்பதால்தான் உடனடியாய் விஜய்சேதுபதி காம்பினேஷனிலேயே அடுத்தப் படத்தை கமிட் பண்ணி இருக்கிறார். அதே சமயம் இன்னொரு பக்கம் அஜித்திடம் கதை சொல்லும் முயற்சியையும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறாராம். அஜித்திடமிருந்து பதில் வரவில்லை என்றால், தன்னுடைய காதலியான நயன்தாரா மூலம் அஜித்தை சந்திக்கும் எண்ணத்தில் இருக்கிறாராம்.
வளரும் இயக்குநராக இருந்த சுந்தர்.சி., ரஜினியை சந்தித்து கதை சொல்ல விரும்பியபோது, தன் காதலியான குஷ்பூ மூலம்தான் ரஜினியை சந்தித்து கதை சொல்லி அருணாச்சலம் படத்தை இயக்கும் வாய்ப்பைப் பெற்றார். அதே சூழல் தற்போது விக்னேஷ் சிவனுக்கும் ஏற்பட்டிருக்கிறது.