மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி |
மெட்ராஸ் கலையரசன் நாயகனாக நடித்துள்ள படம் டார்லிங்-2. அவருடன் மாயா, காளி வெங்கட், முனீஷ்காந்த், ரமீஸ், ஜானி உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்தை சதீஷ் சந்திரசேகரன் இயக்கியுள்ளார். ரதன் இசையமைத்துள்ள இப்படத்துக்கு விஜய் கார்த்திக் கண்ணன் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். ஸ்டுடியோ கிரீன் ஞானவேல்ராஜா படத்தை வெளியிடுகிறார். இப்படத்தின் பிரஸ்மீட் நேற்று இரவு 7 மணி அளவில் சென்னையில் நடைபெற்றது. அப்போது படக்குழுவினர் அனைவரும் அதில் கலந்து கொண்டனர்.
பட நாயகன் கலையரசன் பேசும்போது, டார்லிங்-2 படம் மெட்ராஸ் படத்துக்கு அப்புறம் எனக்கு வரப்போற பெரிய ரிலீஸ். மெட்ராஸ் படத்தின் அலுவலகத்தில் நான் இருந்தபோது இந்த வாய்ப்பு வந்தது. போய் கதையை கேட்டேன் ரொம்ப பிடித்து விட்டது. இந்த படம் நண்பர்களுக்கிடையே நடக்கிற ஒரு ஜாலியான கதை. ரொம்ப இயல்பாக இருக்கும். இந்த படத்தில் நடித்த பல நடிகர்கள் சேலஞ்சிங்கானவர்கள் அவர்களுடன் நடித்தது நல்ல அனுபவமாக அமைந்தது.
இந்த படத்தில் கதை, மியூசிக் என எல்லாமே நன்றாக வந்துள்ளது. என்றாலும் படத்தை அடுத்த லெவலுக்கு கொண்டு போனது ஞானவேல்ராஜாதான். ஸ்டுடியோ கிரீன் டார்லிங்-2 படத்தை ரிலீஸ் பண்ணுகிறார்கள் என்றதும் படத்தை பார்க்கிற பார்வையே வேற மாதிரியாகி விட்டது. புதியவர்களுக்கு அவர்கள் நிறைய சப்போட் பண்ணுகிறார்கள். இதை தொடர்ந்து செய்ய வேண்டும். புதிய தலைமுறையினரை உருவாக்க வேண்டும் என்றார்.
தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா பேசுகையில், அட்டகத்தி படத்தில் எப்படி அனைவரும் புதுமுகங்களாக இருந்தார்களோ அதேபோல்தான் இந்த டார்லிங்-2 படத்திலும் பெரும்பாலும் புதுமுகங்களாக உள்ளனர். டோட்டல் டீமே ப்ரஸ்ஸான டீம். அட்டகத்தி படத்தை இயக்கியபோது ரஞ்சித் புதியவர். இப்போது ரஜினியை வைத்து கபாலி படத்தை இயக்கியிருக்கிறார். அந்த வகையில், நல்ல திறமைசாலிகள் மீது வெளிச்சம் போடுவதில் மீடியாக்களின் பங்களிப்பு அதிகமாக உள்ளது.
பத்திரிகையாளர்கள் தயாரிப்பாளர், டைரக்டர், நடிகர் நடிகைகளை அணுகுவதில் ஒரு பெரிய இடைவெளி ஏற்பட்டிருக்கிறது. இனிமேல் நமக்கிடையே அந்த இடைவெளி வேண்டாம். உங்களுக்கு என்ன வேணும் என்பதை என்னிடம் கேளுங்கள். நான் எனக்கு என்ன வேணும் என்பதை உங்களிடம் சொல்கிறேன். மீடியாக்களின் தொடர்பு நேரடியாக இல்லாததால் தவறான செய்திகள் வந்து வேறு திசையில் போய்க்கொண்டிருக்கிறது. என்னைப்பொறுத்தவரை பத்திரிகையாளர்களுடனான நேரடி தொடர்புடன் கூடிய நட்பு வளர வேண்டும் என்று நினைக்கிறேன்.
இன்றைக்கு ஒரு முக்கியமான நாள். தோழா படம் ரிலீசாகியுள்ளது. தமிழ், தெலுங்கு என இரண்டு ஏரியாவிலும் படத்திற்கு நல்ல ஓப்பனிங் கிடைத்துள்ளது. பத்திரிகைகள் நல்ல விமர்சனம் கொடுத்துள்ளனர். பாகுபலி படத்திற்கும் மீடியாக்கள் நல்லதொரு ரீச் கொடுத்தனர். அதேபோல் தோழா படத்திற்கும் நல்ல விமர்சனங்கள் கொடுத்திருக்கிறீர்கள். அந்த வகையில் பாகுபலி மாதிரி மொழி பாகுபாடில்லாமல் தோழா படமும் ஓடிக்கொண்டிருக்கிறது. அதற்காக பத்திரிகைகளுக்கு நான் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.
இயக்குனர் சதீஷ் சந்திரசேகரன், சம்பளம் என்று பேசாமல் வெறும் ப்ரண்ட்லியாகத்தான் இந்த படத்தை ஆரம்பித்தேன். படத்தில் நிறைய ஆர்ட்டிஸ்டுகளை நடிக்க வைக்க முடிவு செய்தபோது இவர்களுடன் நமக்கு சிங்க் ஆகுமா, எப்படி வேலை வாங்கப்போகிறோம் என்கிற பயம் அதிகமாகிவிட்டது. அதேபோல் ஸ்பாட்டில் அனைவருமே பெரிய அராஜகம் செய்தனர். நான் ஸ்பாட்டில் இருப்பேன். அவர்கள் அரட்டை அடித்துக் கொண்டிருப்பார்கள். ஊட்டியில் மாலை 6 மணிக்கு படத்தை தொடங்கி அதிகாலை 6 மணிக்குத்தான் படப்பிடிப்பை முடித்தோம். ஊட்டி குளிரில் அனை வருமே நடுங்கிக்கொண்டே நடித்தனர். பேய் படம் என்பதால் அந்த நடுக்கும் கூட அவர்களுக்கு பெரிய உதவியாக இருந்தது.
கொடுக்குமலை என்ற இடத்தில் படப்பிடிப்பு நடத்தியபோது எந்த வசதியும் இல்லை. ஒரு டீ எஸ்டேட் மட்டுமே இருந்தது. டென்ட் போட்டுத்தான் தங்கினோம். ஆனபோதும் நடிகர் நடிகைகள் அனைவருமே எந்த வசதி குறைவையும் பொருட்படுத்தாமல் நடித்தனர். டார்லிங்-2 பேய் படமாக இருந்தாலும் ஆழமான நட்பை சொல்லும் படம். மேலும் இந்த படத்தை முதலில் சாதாரணமாகத்தான் தொடங்கினோம். ஆனால் இப்போது இந்த படத்தை ஸ்டுடியோ கிரீன் நிறு வனம் வெளியிடுகிறது. அதனால் எங்கள் படம் பெரிய படமாகி விட்டது. சின்ன விசயத்தையும் ஆடியன்சிடம் பெரிய விசயமாக கொண்டு போய் சேர்க்கும் அவர்கள் எங்கள் படத்தையும் பெருசாக கொண்டு போய் சேர்ப்பார்கள் என்ற நநமபிக்கை உள்ளது என்றார்.
நாயகி மாயா பேசுகையில், நான் லீடாக பண்ணும் முதல் படம் இது. என் மனசுக்கு ரொம்ப நெருக்கமான படமும்கூட. இந்த யூனிட்டிடமிருந்து டெடிகேட்டடா இருக்கிறது என்பதை கற்றுக்கொண்டேன். எல்லோரும் ஜாலியாக இருப்பாங்க. ஆனா டேக் என்றதும் ஒரே டேக்கில ஓகே செய்து விடுவார்கள். அது ஒரு மேஜிக் மாதிரி இருக்கும். இவர்களிடமிருந்து நான் நிறைய கற்றுக்கொண்டிருக்கிறேன். இந்த படத்தில் ஒரு அழகான காதல், நட்பு உள்ளது. பயப்படுற மாதிரியான விசயங்களும் நிறைய உள்ளன.
மேலும், கலையரசன், காளி வெங்கட், முனீஷ்காந்த் ஆகியோரை நான் ஒவ்வொரு தடவையும் அண்ணா என்று கூப்பிடும்போது நிஜமான அண்ணன்கள் என்கிற பீலில்தான் கூப்பிட்டேன். அந்த வகையில் அவர்கள் ஒவ்வொருவருமே எனக்கு நிறைய நடிப்பு டிப்ஸ் கொடுத்து உதவி செய்தார்கள் என்றார்.