ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
குணசித்திர நடிகர் டெல்லி கணேஷ் மகன் மஹாவுக்கு சினிமாவில் நடிக்க வேண்டும் என்று ஆசை. இதற்காக லண்டன் படிப்பை முடித்து விட்டு சென்னை திரும்பியவர் நடிப்பு வாய்ப்பு தேடியதில் வாய்ப்பு கிடைத்தது. ஆனால் தயரிப்பாளர்தான் கிடைக்கவில்லை. இதை உணர்ந்த டெல்லி கணேஷ் தன் மகனை ஹீரோவாக்க தானே தயாரிப்பாளராகிவிட்டார்.
அவரது தயாரிப்பில் மகன் நடிப்பில் உருவாகி உள்ள படம்தான் என்னுள் ஆயிரம். ஏ.எல். விஜய்யின் உதவியாளர் கிருஷ்ணகுமார் இயக்கி உள்ளார். கோபி சுந்தர் இசை அமைத்துள்ளார். நீரவ்ஷாவின் உதவியாயர் அதியராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார். படம் ரிலீசுக்கு தயாராக இருக்கிறது. சுமார் 3 கோடியில் தயாரான படத்தை வாங்க யாரும் முன்வராததால் மேலும் சில கோடி செலவு செய்து தானே வெளியிட முடிவு செய்திருக்கிறார். டெல்லி கணேஷ்.
இதுபற்றி அவர் கூறியதாவது: ஒரு மகனை டாக்டராக்க தகப்பன் 2 கோடி செலவு செய்கிறான். நான் என் மகனை ஆக்டர் ஆக்க சில கோடிகளை செலவு செய்கிறேன். அவ்வளவுதான். ஒரு தந்தையாக அவன் ஆசைப்பட்டதை செய்து கொடுக்க வேண்டியது என் கடமை. நான் சம்பாதித்து சேர்த்த வைத்த பணத்தைத்தான் செலவு செய்கிறேன். என் மருமகன் பணம் கொடுத்து உதவுகிறார். நண்பர்கள் உதவினார்கள். அதைக் கொண்டு படத்தை எடுத்து முடித்து விட்டேன். யாருக்கும் ஒரு ரூபாய்கூட சம்பள பாக்கி வைக்கவில்லை.
புதுமுகம் நடித்த படம் என்பதால் யாரும் வாங்க முன்வரவில்லை. வருவார்கள் என்று காத்திருக்கவும் முடியாத நிலை. அதனால் நானே வெளியிடுவது என்ற முடிவு செய்து விட்டேன். எது செய்தாலும் அது என் மகனின் நன்மைக்கே. மகனை மட்டுமல்ல ஒரு இயக்குனரை. ஒரு ஒளிப்பதிவாளரை சில நடிகர்களை அறிமுகப்படுத்துகிறேன். அந்த வகையில் எனக்கு மிகவும் மகிழச்சி. என் மீதுள்ள அபிமானம் காரணமாகவும், படம் நன்றாக வந்திருப்பதாலும் நிச்சயம் தமிழ்நாட்டு மக்கள் வரவேற்பார்கள் என்று உறுதியாக நம்புகிறேன் என்கிறார் டெல்லி கணேஷ்.