ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
ஒளிப்பதிவாளராக இருந்த கேவி ஆனந்த், கனா கண்டேன் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். தொடர்ந்து அயன், கோ, மாற்றான், அனேகன் போன்ற படங்களை இயக்கினார். இதில் அயன், கோ படங்கள் தான் பெரிய அளவில் ஹிட்டாகின. அனேகன் படத்தை அடுத்து கேவி.ஆனந்த், அஜித்தை கொண்டு படம் இயக்கப்போவதாக செய்திகள் வந்தது. ஆனால் அஜித்தோ, மீண்டும் சிவா இயக்கத்தில் நடிக்க தயாராகிவிட்டார். இதனால் கேவி.ஆனந்த், விஜய் சேதுபதியை வைத்து ஒரு படம் இயக்குவதாக செய்திகள் வந்த நிலையில் இப்போது இவர்கள் இணையும் படம் உறுதியாகியுள்ளது.
இப்படத்தை, ஏ.ஜி.எஸ் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் சார்பாக கல்பாத்தி எஸ்.அகோரம், கல்பாத்தி எஸ்.கணேஷ், கல்பாத்தி எஸ்.சுரேஷ் ஆகியோர் தயாரிக்கிறார்கள். விஜய் சேதுபதி ஹீரோவாக நடிக்கும் இப்படத்தில் டி.ராஜேந்தரும் ஒரு முக்கிய ரோலில் நடிக்கிறார்.
ஏ.ஜி.எஸ். நிறுவனத்தின் 18வது தயாரிப்பாக உருவாகும் இப்படத்தில் எழுத்தாளர்கள் சுபா, பாடலாசிரியர் கபிலன் வைரமுத்து உள்ளிட்டோர் பணியாற்றுகிறார்கள். இசையமைப்பாளர், நடிகர் நடிகையர், தொழில்நுட்ப கலைஞர்கள் பற்றிய பிற விவரம் விரைவில் அறிவிக்கப்படும் என தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.