ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
சினிமாவில் நட்புக்கு மதிப்பில்லை, வெற்றிக்கு மட்டுமே மரியாதை என்று சொல்வார்கள். அதாவது மார்கெட் இல்லாமல்போனால் யாருமே நட்புக்காக வாய்ப்பு கொடுக்க மாட்டார்கள் என்பது திரையுலகினரின் அனுபவப்பாடம். இதற்கு சமீபத்திய உதாரணமாகி இருக்கிறார் யுவன்சங்கர்ராஜா. லிங்குசாமி இயக்குநராக அறிமுகமான ஆனந்தம் படத்துக்கு எஸ்.ஏ.ராஜ்குமார் இசையமைத்தார். அதன் பிறகு லிங்குசாமி இயக்கிய ரன், ஜி ஆகிய படங்களுக்கு வித்யாசாகர் இசையமைத்தார்.
ஜி படம் தயாரிப்புநிலையில் இருந்தபோது, பின்னணி இசையமைப்பின்போது ஜி படம் நல்லா இல்லை ஓடாது என்று வித்யாசாகர் கமெண்ட் அடித்தாராம். அதனால் கடுப்பான லிங்குசாமி அடுத்து இயக்கிய சண்டக்கோழி படத்துக்கு யுவச்ங்கர்ராஜாவை தேடிப்போனார். அஞ்சான் படம் வரை லிங்குசாமிக்கு யுவன்சங்கர்ராஜாதான் ஆஸ்தான இசையமைப்பாளர். பீமா படத்துக்கு மட்டும் விக்ரம் சிபாரிசு செய்ததால் ஹாரிஸ் ஜெயராஜ் உடன் பணியாற்றினார்.
இந்நிலையில், 'அஞ்சான்' படத்திற்குப் பிறகு விஷாலை வைத்து 'சண்டக்கோழி 2' படத்தை லிங்குசாமி இயக்கவிருப்பதாக சொல்லப்பட்டது. பின்னர், அப்படம் கைவிடப்பட்டதால் தற்போது தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுனை வைத்து தெலுங்குப்படம் ஒன்றை இயக்க உள்ளார். இப்படத்திற்கு யார் இசையமைப்பது என்று பேச்சு வந்தபோது யுவன்சங்கர்ராஜா வேண்டாம் என்று சொன்னது வேறு யாருமல்ல, லிங்குசாமிதானாம். அதுமட்டுமல்ல அனிருத்தை கமிட் பண்ணச்சொல்லி இருக்கிறார். இந்த தகவல்கள் யுவன்சங்கர்ராஜாவுக்கு சொல்லப்பட... லிங்குசாமி மீதான தன் வருத்தத்தை வெளிப்படுத்தினாராம்.
காரணம்... யுவன் பிசியாக இருந்த நேரத்தில் மற்ற படங்களின் வேலைகளை ஒதுக்கி வைத்துவிட்டு லிங்குசாமியின் படங்களுக்கு முன்னுரிமை கொடுத்து வேலை பார்த்தாராம். அதை எல்லாம் அதற்குள் மறந்துவிட்டாரே என்பது யுவனின் வருத்தமாம்.