சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் |
விஜய் டி.வியில் கடந்த ஒரு வருடங்களாக நடந்து வந்த சூப்பர் சிங்கர் 5 போட்டியில் இறுதி சுற்றுக்கு ஆனந்த் அரவிந்தாக்ஷ்ன், ஃபரிதா, ராஜ கணபதி, லட்சுமி பிரதீப், ஷியாத் ஆகிய 5 பேர் இறுதி சுற்றுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்கள்.
இறுதி சுற்று போட்டிகள் நேற்று இரவு பழைய மகாபலிபுரம் சாலையில் உள்ள டி.பி.ஜெயின் கல்லூரியின் திறந்த வெளி அரங்கில் நடைபெற்றது. இதில் ஆனந்த் அரவிந்தாக்ஷ்ன் சூப்பர் சிங்கர் 5 டைட்டிலை வென்றார். அவருக்கு இசை அமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் 75 லட்சம் ரூபாய்க்கான வீட்டை பரிசாக வழகினார்.
இரண்டாவது பரிசு ஃபரீதாவுக்கு கிடைத்தது. அவருக்கு 10 லட்சம் ரூபாயை பாடகி சித்ரா வழங்கினார் 3ம் பரிசு ராஜகணபதிக்கு கிடைத்தது, அவருக்கு 5 லட்சமும், 4ம் பரிசு பெற்ற லட்சுமி பிரதீப்புக்கு 3 லட்சம் ரூபாயும், 5ம் இடம்பெற்ற ஷியாத்துக்கு 2 லட்சம் ரூபாயும் பரிசாக வழங்கப்பட்டது.
விழாவில் பரிசுகளை வழங்கி பேசிய சந்தோஷ் நாராணயன் ஆனந்துக்கும், ஃபரீதாவுக்கு திரைப்படத்தில் பாட வாய்ப்பு அளிக்க இருப்பதாக உறுதி அளித்தார். விழாவில் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடந்தது. நிகழ்ச்சியை மா.பா.கா.ஆனந்தும், பிரியங்கா, பாவனாவும் தொகுத்து வழங்கினார்கள். மாலை 6 மணிக்கு தொடங்கிய நிகழ்ச்சி நள்ளிரவு 12.45 மணிக்கு நிறைவடைந்தது.