பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை |
ஒரு திறமையான தயாரிப்பாளரின் மகனாக இருந்தும் கதைத் தேர்விலும், இயக்குனர்கள் தேர்விலும் கோட்டை விடுபவராக இருக்கிறார் நடிகர் ஜீவா. எந்தவிதமான சினிமா பின்பலமும் இல்லாத சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி ஆகியோரிடம் இருக்கும் தேர்வு கூட ஜீவாவிடம் இல்லாதது குறித்து கோலிவுட் வட்டாரங்கள் நிறையவே வருத்தப்படுகிறது.
ஜீவா நடித்து 'கோ' படத்திற்குப் பிறகு வெளிவந்த படங்களில் 'நண்பன்' படம் மட்டுமே சுமாரான வெற்றியைப் பெற்றது. “ரௌத்திரம், வந்தான் வென்றான், முகமூடி, நீதானே என் பொன் வசந்தம், என்றென்றும் புன்னகை, யான், போக்கிரி ராஜா” ஆகிய படங்கள் வந்த அடையாளம் கூடத் தெரியாமல் ஓடிப் போயின. இவர் நடிப்பதாகச் சொல்லப்பட்டு பல மாதங்களுக்கு முன்பே அறிவிக்கப்பட்ட 'கவலை வேண்டாம்' படம் என்ன ஆயிற்று என்றே தெரியவில்லை. ஜீவா நடிக்கப் போகிறார் என்று சொல்லப்பட்ட 'ஜெமினி கணேசன்' படமும் கைவிடப்பட்டதாக கோலிவுட்டில் பேச்சு அடிபடுகிறது.
ஜீவா நடித்து ஆறு மாதங்களுக்கு முன்பே முடிந்த 'திருநாள்' படம் மட்டுமே ஜீவாவின் நம்பிக்கையில் மிச்சமிருக்கும் படமாக உள்ளது. இந்தப் படத்தில் நயன்தாரா நாயகியாக நடித்திருந்தும் இன்னும் படத்தைச் சரியான தேதியில் வெளியிடுவது குறித்து பெரிய திட்டமிடல் எதுவும் இல்லாமல் இருக்கிறார்களாம். இந்தப் படத்தை முதலில் வெளியிட்டிருந்தால் ஜீவா மார்க்கெட்டாவது கொஞ்சம் காப்பாற்றப்பட்டிருக்கும் என்கிறார்கள் வினியோகஸ்தர்கள். ஆனால், 'போக்கிரி ராஜா' படத்தை வெளியிட்டு அனைத்தையும் கெடுத்துவிட்டார்கள் என 'திருநாள்' தயாரிப்பாளரே கதிகலங்கிப் போயிருக்கிறாராம்.
'ராஜா'தான் ஜீவாவைக் காப்பாற்றவில்லை 'தாரா'வாவாது காப்பாற்றுவாரா என்பதுதான் தற்போதைய கேள்வி.