ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
பருத்திவீரன் படத்தின் மூலம் அறிமுகமாகி தொடர்ந்து பையா, நான் மகான் அல்ல, சிறுத்தை என்று ஹிட் படங்களாக கொடுத்து முன்னணி நடிகராக மாறி, மிக குறுகிய காலத்திற்குள்ளேயே தமிழக ரசிகர்களின் இதயத்தில் இடம் பிடித்த கார்த்தி, இப்போது எல்.எஸ்.டி.எஸ்.எஸ்., அமைப்போடு சேர்ந்து, சமூக சேவை பணிகளில் தன்னை ஈடுபடுத்தி கொண்டுள்ளார். குறிப்பிட்ட நோயாளிகள் குழுவுடன் இணைந்து அவர்களுக்கு முறையான நோய் காரணி அறிதல் மற்றும் சிகிச்சை வழங்குதல் ஆகியவற்றுக்கு உதவ முன் வந்துள்ளார். புதிய மரபியல் நோயான திசு உள் செரிமானச் சேமிப்புக் கோளாறினால் பாதிக்கப்படும் நோயாளிகளுக்கான பிரத்யேக உதவி செய்யும் இந்த அமைப்பு சுருக்கமாக எல்.எஸ்.டி.எஸ்.எஸ்., என்று அழைக்கப்படும்.
இதுகுறித்து கார்த்தி செய்தியாளர்களிடம் கூறியதாவது, குழந்தைகள் தங்கள் சின்னஞ் சிறு வயதிலேயே இதுபோன்ற கொடுமையான நோயினால் பாதிக்கப்படுகின்றனர். இதை கண்டு என் நெஞ்சம் படபடத்தது. இவர்களுக்கு உதவும் நோக்கோடு இந்த அமைப்பில் என்னை இணைத்து கொண்டேன். இந்த நோய் குறித்த முறையான விழிப்புணர்வு, பரிசோதனை வசதிகள், சிகிச்சைக்கான நிதி உதவி ஆகியவை மிகவும் அவசியம். என்னுடைய ஆரோக்கியமான ஈடுபாடு மூலம், இந்த குழந்தைகளுக்கு இயன்ற உதவிகளை செய்ய முன்வருவேன். இதன்மூலம் இந்த குழந்தைகளின் வாழ்வில் முன்னேற்றம் ஏற்பட்டால் மகிழ்ச்சி அடைவேன் என்றார்.
இதுகுறித்து இந்த அமைப்பின் தலைவரும், பாம்ப் எனப்படும் ஒரு வகை எல்.எஸ்.டி., நோயினால் பாதிக்கப்பட்டுள்ள தனது 12வயது குழந்தையின் தந்தையான பிரசன்ன குமார் ஷிரோல் பேசுகையில், நோயாளிகளையும், அவர்களது குடும்பங்களையும் இணைத்து தேவையான ஆதரவை பெறுவதற்காக கடந்த ஆண்டு இந்த அமைப்பினை தொடங்கினோம். இந்த அமைப்பில் கார்த்தியும் சேர்ந்திருப்பது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. பாதிக்கப்பட்ட குழந்தைகளின் வாழ்வு மேம்பட வேண்டும் என்ற எங்களின் நோக்கம் வெற்றி பெற இந்த இணைந்த செயல்பாடு ஒரு குறிப்பிடத்தக்க முனைவாகும் என்றார்.
எல்.எஸ்.டி., என்று அழைக்கப்படும் இந்தநோய் உடலியக்கத்தை பாதிப்பதுடன், உயிருக்கும் ஆபத்தையும் விளைவிக்க கூடியது. உடலில் உள்ள உயிர்வினை ஊக்கியின் செயலற்ற தன்மை காரணமாக இதுபோன்று 45விதமான எல்.எஸ்.டி.,க்கள் தோன்றுகின்றன. இதுகுறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக கார்த்தி இந்த அமைப்போடு தன்னை இணைத்து கொண்டுள்ளார்.