ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
விசாரணை என்ற பெயரில் போலீஸ் லாக்அப்பில் நடக்கும் கொடுமைகளை மையமாக வைத்து விசாரணை என்ற படத்தை இயக்கிய வெற்றி மாறன், அதை வெற்றிப் படமாகவும், விருது படமாகவும ஆக்கினார். இது ஆட்டோ டிரைவர் சந்திரகுமார் என்பவர் எழுதிய லாக்அப் என்ற நாவலை அடிப்படையாக கொண்ட கதை.
இதேபோன்று அடுத்தும் ஒரு நாவலை மையமாக வைத்து படம் இயக்குகிறார் வெற்றி மாறன். பிரபல மூத்த பத்திரிகையாளர் நீலிமா “ஷூஸ் ஆஃப் தி டெட்” என்ற நாவலை எழுதியுள்ளார். இது விவசாயிகளின் தற்கொலையை மையமாக கொண்டது. இதற்கான உரிமத்தை எழுதிய நீலிமாவிடம் முறைப்படி பெற்றிருக்கிறார் வெற்றிமாறன்.
தற்போது தனுஷ் நடிக்கும் வட சென்னை படத்தில் கவனம் செலுத்தி வருகிறார். மே மாதம் இதன் படப்பிடிப்பு தொடங்குகிறது. இதனை தனுஷ் தயாரிக்கிறார். இதன் பிறகுதான் விசாயிகள் தற்கொலை சினிமாவை இயக்குகிறார். இதனை வெற்றி மாறனின் கிராஸ் ரூட் நிறுவனமே தயாரிக்கிறது. வெற்றிமாறனின் ஆஸ்தான நடிகர் கிஷோர் நடிக்கலாம் என்று தெரிகிறது.