ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது |
தமிழ் சினிமாவில் அடிக்கடி காணாமல் போகும் நடிகர்களில் ஒருவர் ஜெய். தொடர்ந்து தோல்விப் படங்களைக் கொடுத்துக் கொண்டிருப்பவர் என்ற சென்டிமென்டிலிருந்து தன்னை விடுவித்துக் கொள்ள கடுமையாகப் போராடிக் கொண்டிருக்கிறார். பல புதுப்புது நடிகர்கள் வந்து கொண்டிருக்கும் சூழ்நிலையில் ரசிகர்கள் தன்னை மறந்துவிடக் கூடாது என்பதற்காக மீடியாக மீது திடீர் பாசம் கொண்டவராக 'புகழ்' படத்திற்காக பேட்டிகளைக் கொடுத்து வருகிறார். அப்போது நடிகை அஞ்சலியுடன் நட்பாகப் பழகி வருவதாகவும், அது காதலாக மாறுமா என்பது தெரியாது என்றும் கூறியிருக்கிறார்.
அவர் இப்படிச் சொன்னால் மீடியாக்கள் ஜெய்யும், அஞ்சலியும் காதலிக்கிறார்களா என பரபரப்புச் செய்திகளைப் போட்டு 'புகழ்' படத்திற்கு மேலும் புகழ் சேர்க்க ஆசைப்படுகிறார். யார் கொடுத்த ஐடியாவோ இது, இருந்தாலும் ஜெய்யை ரசிகர்களே மறந்து போயுள்ள நிலையில் யாரும் இதற்கு அவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கவில்லை. தெலுங்குப் பக்கம் போனதால் அஞ்சலியையே நமது ரசிகர்கள் மறந்துவிட்டார்கள் என்பது பாவம் ஜெய்க்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. 'மாப்ள சிங்கம்' படம் மூலம் மீண்டும் தமிழ் ரசிகர்களின் மனதில் இடம் பிடிக்க முயற்சித்த அஞ்சலி, அந்தப் படத்தில் வழக்கத்தை விட கொஞ்சம் கிளாமராகவே நடித்திருந்தார்.
போகிற போக்கில் அஞ்சலியைக் காதலித்தாலும் காதலிப்பேன் என ஜெய் கூறியிருப்பதற்கு அஞ்சலி என்ன பதில் சொல்லப் போகிறார். அதை ஆமோதிக்கப் போகிறாரா அல்லது எதிர்க்கப் போகிறாரா..?.