ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
நயன்தாரா, காஜல் அகர்வால், ஹன்சிகா, சமந்தா போன்ற கதாநாயகிகள் கோடிகளில் சம்பளம் வாங்கிக் கொண்டிருப்பதால், மீடியம் பட்ஜெட்டில் படம் எடுக்கும் தயாரிப்பாளர்கள் மிரண்டு போயிருக்கிறார்கள். தங்களின் படங்களுக்கு யாரை கதாநாயகியாக நடிக்க வைப்பது என்று தெரியாமல் முழிபிதுங்கிப்போய் உள்ளனர். இப்படிப்பட்ட தயாரிப்பாளர்களுக்கு இன்றைய தேதிதியில் கைகொடுக்கும் கதாநாயகிகள் ஸ்ரீதிவ்யா, நந்திதா, ஐஸ்வர்யா ராஜேஷ் போன்ற வெகு சில நடிகைகள்தான்.
இந்த வரிசையில் இப்போது சேர்ந்திருப்பவர் ஸ்ருஷ்டி டாங்கே. சமீபத்தில் வெளியான கத்துக்குட்டி, வில் அம்பு, நவரசதிலகம் ஆகிய படங்களில் கதாநாயகியாக நடித்த ஸ்ருஷ்டி டாங்கேவை புக் பண்ண தயாரிப்பாளர்கள் ஆர்வம் காட்டுகின்றனர். காரணம்.. சம்பள விஷயத்தில் அவர் கறாராக நடந்து கொள்வதில்லையாம். நவரசத்திலகம் படத்தை அடுத்து தற்போது சாந்தனுக்கு ஜோடியாக ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார்.
'வாய்மை' படத்தில் நடித்து முடித்திருக்கும் சாந்தனு அடுத்து 'முப்பரிமானம்' என்ற படத்தில் நடிக்கவிருக்கிறார். அறிமுக இயக்குனர் அதிரூபன் இயக்கவிருக்கும் இப்படம் முழுக்க முழுக்க அதிரடி ஆக்ஷன் படமாக உருவாகவிருக்கிறது. இப்படத்தில்தான் சாந்தனுவுக்கு ஜோடியாகி இருக்கிறார் ஸ்ருஷ்டி டாங்கே.