மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி |
சசி இயக்கத்தில் விஜய் ஆண்டனி நாயகனாக நடித்துள்ள படம் 'பிச்சைக்காரன்'. கடந்த 4-ந்தேதி வெளியான இப்படம் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. அதோடு, முதல் வாரம் முடிந்து இரண்டாவது வாரமும் அதே அளவு தியேட்டர்களில் தினமும் 4 காட்சிகளாக பிச்சைக்காரன் திரையிடப்படுகிறதாம். இந்நிலையில், நேற்று இரவு 7 மணி அளவில் அப்படத்திற்கான சக்சஸ் பிரஸ்மீட் சென்னையில் நடைபெற்றது.
அப்போது விஜய் ஆண்டனி பேசும்போது, ரொம்ப சந்தோசமா இருக்கு. இந்த பிச்சைக்காரன் ரிலீசுக்கு முன்னாடி ஒரு பேட்டியில், பிச்சைக்காரன் ஓடலேன்னா உண்மையிலேயே நான் பிச்சைக்காரன் ஆகிடுவேன் என்று சொன்னேன். முன்பு எம்ஜிஆருக்கும் இதே மாதிரி ஒரு நிலை ஏறபட்டதாக சொல்றாங்க. அதாவது நாடோடி மன்னன் படத்தை எம்ஜிஆரே இயக்கி, தயாரித்து நடித்தாராம். அப்போது இந்த படம் ஓடுனா நான் மன்னன், இல்லேன்னா நாடோடி என்று சொன்னாராம். அந்த மாதிரி எனக்கும் பிச்சைக்காரன் அமைந்தது.
மேலும், இந்த படத்தில் எனக்கு எந்த புகழ், பாராட்டு வந்தாலும் அதை அப்படியே டைரக்டர் சசியிடம் கொடுத்து விடுகிறேன். இந்த படத்தில் நான் நன்றாக நடித்திருப்பதாக சொன்னாலும், நன்றாக இசையமைத்திருப்பதாக சொன்னாலும் எல்லாத்துக்கும காரணம் சசி சார்தான். இந்த பிச்சைக்காரன் கதையை உருவாக்க சசி சார் குறைந்தபட்சம் 2 வருடம் செலவு பண்ணியிருக்கிறார். நான் பியூச்சரில் எத்தனை படங்களில் நடித்தாலும் பிச்சைக்காரன் மாதிரி ஒரு படம் கிடைக்காது.
அதோடு, நான் இசையமைப்பாளராக சினிமாவிற்கு வந்தபோது சசி சார்தான் டிஷ்யூம் படத்தில் எனக்கு வாய்ப்பு கொடுத்தார். அதன்பிறகு இப்போது பிச்சைக்காரன் படத்தை அதைவிட பெரிய வாய்ப்பாக, பெரிய பரிசாக எனக்கு கொடுத்திருக்கிறார். அதற்காக அவருக்கு நான் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். அதேபோல் என் மனைவி பட்டுவிற்கும் என் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். என் மனைவியை நான் பட்டு என்றுதான் கூப்பிடுவேன். அவர் இல்லேன்னா நான் இல்லை. அவர்தான் பில்லர் மாதிரி இருந்து எனக்காக உழைத்துக்கொண்டிருக்கிறார். அதனால் அவருக்கும் நான் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன் என்றார்.