ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
'வல்லவன்' படத்தில் நடித்தபோது அப்பட நாயகி நயன்தாராவை காதலித்தார் சிம்பு. ஆனால் அந்த காதல் சில மாதங்கள் கூட நீடிக்கவில்லை. எத்தனை சீக்கிரத்தில் உருவானதோ அத்தனை சீக்கிரத்தில் முறிந்து போனது. மேலும், நயன்தாராவைத் தொடர்ந்து 'வாலு' படத்தில் நடித்தபோது ஹன்சிகாவையும் காதலித்தார் சிம்பு. அதனால் முதல் காதலில் தோற்று விட்ட சிம்பு, இரண்டாவது காதலில் கட்டாயம் ஜெயித்து விடுவார் என்று கருதப்பட்டது. ஆனால், ஹன்சிகாவுடனான காதலிலும் தோல்வி கண்டார் சிம்பு. அவர்களது காதல் முறிவுக்கான காரணம் இரண்டுபேர் தரப்பில் இருந்தும் இதுவரை வெளியாகவில்லை.
மேலும், சிம்புவை விட்டு ஹன்சிகா விலகி விட்டதாக செய்திகள் வெளியானதை அடுத்து அவரது மார்க்கெட் மறுபடியும் சூடுபிடித்தது. இந்நிலையில், தற்போது ஹன்சிகா விடுத்துள்ள ஒரு செய்தியில், நான் சிம்புவை ஒரு போதும் காதலிக்கவில்லை. வாலு படத்தில் இயல்பாக நடித்ததை வைத்து அப்படியொரு செய்தியை பரப்பி விட்டனர். என்னைக்கேட்டால் சிம்புவை நான் காதலிப்பதாக வெளியான செய்தி வெறும் வதந்தி மட்டுமே. அதில் துளிகூட உண்மையில்லை.அதோடு, இதற்கு முன்பு என்னிடம் லவ் புரபோஸ் செய்தது ஒருயொரு நபர்தான். அது என்னுடன் 8-வது வகுப்பு படித்த ஒரு மாணவன். ஆனால் நான் அதை ஏற்கவில்லை. அதன்பிறகு இப்போதுவரை யாரும் என்னிடம் ஐ லவ் யூ சொன்னதில்லை. அதேபோல் யார் மீதும் எனக்கு இதுவரை காதல் வந்ததில்லை என்கிறார் ஹன்சிகா.