மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி |
தமிழ் சினிமாவில் அனைத்து முன்னணி ஹீரோக்களுடனும் நடித்து விட்டவர் சினேகா. அந்த வகையில், தென்னிந்திய சினிமாவில் புன்னகை இளவரசியாக வலம் வந்த அவர், அச்சமுண்டு அச்சமுண்டு படத்தில் பிரசன்னாவுடன் இணைந்து நடித்தபோது அவரை காதலித்தார். அதன்பிறகும் பல வருடங்களாக அவர்களது காதல் தொடர்ந்து வந்த நிலையில், பின்னர் அவரை திருமணம் செய்து கொண்ட சினேகா தற்போது ஒரு குழந்தைக்கு அம்மாவாகி விட்டார்.மேலும், திருமணத்திற்கு பிறகும் ஹரிதாஸ், உன் சமையலறையில் ஆகிய படங்களில் நாயகியாக நடித்த சினேகா, பல படங்களில் நட்புக்காகவும் நடித்துள்ளார்.
இந்நிலையில், மகன் விகானை வளர்ப்பதில் முழுநேரத்தையும் தற்போது செலவிட்டு வருகிறார். மேலும், ஆன்மீகத்தில் அதிக ஈடுபாடு கொண்டவரான சினேகா, தனது கணவர் பிரசன்னா, மகன் விகானுடன் பழனி தண்டாயுதபாணி கோயிலில் சாமி தரிசனம் செய்துள்ளர். இதற்காக மலைக்கோயிலில் உள்ள தண்டாயுதபாணி சாமி சன்னதிக்கு ரோப் காரில் சென்ற சினேகா, சாமியை தரிசனம் செய்துவிட்டு சென்னை திரும்பியுள்ளார்.