ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
சின்ன சின்ன கேரக்டரில் நடித்து வந்த விமல், சற்குணம் இயக்கிய 'களவாணி' படத்தின் மூலம் ஹீரோ அந்தஸ்த் பெற்றார், தொடர்ந்து வாகை சூட வா போன்ற படங்களில் நடித்து புகழ்பெற்றார். ஆனால் சமீபகாலமாக அவர் நடித்து வெளியான படங்கள் அனைத்து தோல்வியை சந்தித்து வருகின்றனர்.
இதுப்பற்றி விமலிடம் கேட்டபோது அவர் நம்மிடம் கூறியதாவது... நீங்கள் சொல்வது உண்மை தான். நண்பர்களுக்காக, தெரிந்தவர்களுக்காக நிறைய படங்களில் நடித்தேன். ஒரேநேரத்தில் 3 படங்களில் கூட நடித்தேன். அதனால் கதைகளில் அந்தளவுக்கு சரியாக கவனம் செலுத்தவில்லை. இதன்மூலம் சினிமாவில் இத்தனை ஆண்டு காலம் நான் பாடம் கற்று கொண்டேன்.
இப்போது என் நடிப்பில் 'மாப்ள சிங்கம்' படம் வருகிற 11ம் தேதி ரிலீஸாக இருக்கிறது. இந்தப்படத்திற்கு அடுத்து பூபதி பாண்டியன் இயக்கும் ஒரு படத்தில் நடிக்கிறேன். நான் ஒரு முடிவு எடுத்திருக்கிறேன். அதாவது இனி அவசரப்பட மாட்டேன். ஒரு படத்தை முடித்த பின்னர் தான் அடுத்தப்படத்தில் நடிப்பேன், இனி நல்ல கதையம்சம் உள்ள படங்களை தேர்வு செய்து நடிப்பேன் என்று கூறியுள்ளார்.
விமல் நடித்துள்ள மாப்ள சிங்கம் படம் மார்ச் 11ம் தேதி வெளியாகிறது. இதில் விமல் ஜோடியாக அஞ்சலி நடித்திருக்கிறார்.