ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
பூ, களவாணி, நெல்லு, விருந்தாளி போன்ற படங்களுக்கு இசையமைத்தவர் எஸ்.எஸ்.குமரன். அதையடுத்து தேனீர் விடுதி, கேரள நாட்டிளம் பெண்களுடனே ஆகிய படங்களை இயக்கி இசையமைத்து தயாரித்தார். ஆனால் அந்த படங்கள் எதிர்பார்த்தபடி வெற்றி பெறவில்லை. அதனால் இனிமேல் படம் இயக்கப்போவதில்லை என்று மற்ற இயக்குனர்களின் படங்களுக்கு இசையமைக்கத் தொடங்கினார் எஸ்.எஸ்.குமரன். ஆனால் அந்த படங்கள் எதிர்பார்த்தபடி திரைக்கு வரவில்லை.
அதனால் இசையமைக்க அடுத்தடுத்து படங்கள் இல்லாததால் மறுபடியும் படம் இயக்கும் முயற்சியில் இறங்கியிருக்கிறார் எஸ்.எஸ்.குமரன். ஆனால் முன்பு புதுமுக நடிகர்களை வைத்து படம் இயக்கிய அவர், அடுத்து பிரபல நடிகர்களை வைத்து படம் இயக்க வேண்டும் என்று அதர்வா, விக்ரம்பிரபு போன்ற நடிகர்களிடம் கால்சீட் கேட்டு வருகிறார். இவர்களில் யார் முதலில் கால்சீட் கொடுக்கிறார்களோ அவர்களை வைத்து தனது அடுத்த படத்தை தொடங்கி விடுவாராம் எஸ்.எஸ்.குமரன். அப்படம் செண்டிமென்ட் கதையில் உருவாகிறதாம்.