சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் |
திருட்டு விசிடி என்கிற மாபியா கும்பலினால் சினிமா ஆபத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது என்கிறார் நடிகர் கருணாஸ். இதுகுறித்து மேலும் அவர் கூறுகையில்,
இன்றைக்கு சினிமாவின் நிலை படுமோசமாக உள்ளது. அது காப்பாற்றப்பட வேண்டும். இதைத்தான் நான் மேடைக்கு மேடை சொல்லி வருகிறேன். சாதனையாளர்கள் என்று சொல்லிக்கொள்பவர்கள் எல்லோரும் மைதானம் இருந்தால் மட்டும்தான் தங்களை மக்களுக்கு அடையாளம் காட்டிக்கொள்ள முடியும். ஆனால் இன்றைக்கு இருக்கக்கூடிய சூழ்நிலை தொடருமானால் வருங்காலங்களில் சினிமா என்றொரு மைதானமே இல்லாமல் போய் விடும்.எப்படி தமிழகத்தில் ஏரிகள், குளங்கள் இல்லாமல் போனதோ அதேமாதிரி சினிமாவும் முழுக்க முழுக்க இல்லாமல் போவதற்கான வாய்ப்புகள் உள்ளது.
அதனால் சினிமா நேசிக்கிறவர்கள் அனைவரும் ஒன்றுகூடி குறிப்பாக சிறிய படங்களையும் ஓட வைக்கக்கூடிய முயற்சிகளில் இறங்கினால்தான் இந்த சினிமா உலகம் ஆபத்தில் இருந்து தப்பிக்கும். நான் ஒரு சின்ன நடிகராக இருந்தாலும்கூட ஒரு ஐந்து படங்களை தயாரித்திருக்கிறேன். அந்த படங்களை வெளியிட பட்ட கஷ்டங்களை பல மேடைகளில் சொல்லியிருக்கிறேன். மேலும், இப்போது ஒருவாரத்துக்கு நான்கு, ஐந்து படம் திரைக்கு வருகிறது. ஒரு பையன் கடைக்கு சென்று புதுபட விசிடி கேட்டால் ரஜினிமுருகன், கதகளி இருப்பதாக கடைக்காரன் சொல்கிறான். அதற்கு அந்த பையன், அது பழைய படம். நேற்று ரிலீசான படம் இருக்கா? என்று கேட்கிறான். அதேமாதிரி பெங்களூர் நாட்கள் என்றொரு படம் ரிலீசாகிற அன்று மதியம் 12 மணிக்கே ஒரு வெப்சைட்டில் ஓடிக்கொண்டிருந்தது.
இதை யார் கேட்பது? யார் தடுப்பது?என்கிற மிகப்பெரிய சவால் உள்ளது. திருட்டு விசிடி விற்பவனுக்குகூட அந்த தொழில் லாபம் இருப்பது தெரிகிறது. ஆனால் கோடிக்கணக்கில் முதலீடு செய்யும் தயாரிப்பாளரின் நிலைமை கேள்விக்குறியாக உள்ளது. எந்தவிதமான முதலீடு செய்யாமல் ஒரு மாபியா கும்பல் சினிமாவை கொள்ளை அடித்துக்கொண்டிருக்கிறார்கள். இதை தடுத்தால் மட்டுமே சினிமா என்றொரு உலகம் இருக்கும். இல்லையேல் எதிர்காலத்தில் அது இல்லாமல் போய் விடும். அதனால் சினிமாவை நேசிப்பவர்கள் அதை காப்பாற்ற வேண்டும் என்கிறார் கருணாஸ்.