அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு |
தனுஷின் உண்டர்பார் பிலிம்ஸ் தயாரிப்பில், அஸ்வினி ஐயர் திவாரி இயக்கத்தில் அமலா பால், ரேவதி, சமுத்திரக்கனி மற்றும் பலர் நடிக்கும் படம் 'அம்மா கணக்கு'. இளையராஜா இசையமைக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த மாதம் 7ம் தேதியன்று ஆரம்பமானது. சுமார் ஒன்றரை மாதத்தில் நேற்றுடன் இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்தது. அவ்வளவு சீக்கிரத்தில் படத்தைத் திட்டமிட்டு முடித்த படக்குழுவினரை தயாரிப்பாளர் தனுஷ் பாராட்டியுள்ளார்.
அஸ்வினி ஐயர் திவாரி ஹிந்தியில் இயக்கிய 'நில் பட்டே சன்னாட்டா' படத்தின் ரீமேக்தான் 'அம்மா கணக்கு' திரைப்படம். ஒரு அம்மாவுக்கும் மகளுக்கும் இடையிலான பாசப் போராட்டம்தான் கதை. தமிழில் நம்பிக்கை தரக்கூடிய படங்கள் கடந்த சில காலமாக வந்து கொண்டிருக்கின்றன. அப்படி ஒரு படமாகத்தான் இந்தப் படமும் அமையும் என இந்தப் படம் பற்றி படம் ஆரம்பமாவதற்கு முன்பே தனுஷ் தெரிவித்திருந்தார்.
படத்தின் இறுதிக் கட்டப் பணிகள் முடிந்ததும், ஏப்ரல் மாதம் இப்படத்தை வெளியிட உள்ளனர்.